districts

img

எல்ஐசி முகவர்களுக்கு மெடிகிளைம் பாலிசி வழங்க வலியுறுத்தல்

தருமபுரி, ஜூலை 26- எல்ஜசி முகவர்களுக்கு மெடிகிளைம் பாலிசி வழங்க வேண்டும் என அகில இந்திய  எல்ஜசி முகவர்கள் சங்க மாநாடு வலியுறுத் தியுள்ளது.  அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத் தின் 4 ஆவது கோட்ட மாநாடு தருமபுரி எஸ்வி சாலையில் உள்ள பூபதி மண்டபத்தில் நடைபெற்றது. கோட்ட தலைவர் ஏ.முருகன் நாயனார் தலைமையில் நடைபெற்ற இந்த  மாநாட்டில், கிளை நிர்வாகி உஷா செந்தில் குமார் வரவேற்றார். ஓசூர் கிளை செயலாளர் சி.கிருஷ்ணப்பா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில செயலாளர் பி.குமார் மாநாட்டை துவக்கிவைத்து பேசினார். கோட்ட செயலாளர் கே.சிவமணி  வேலை  அறிக்கையும், பொருளாளர் கே.லோகநா தன் வரவு செலவு அறிக்கையும் முன்வைத்த னர்.  சிஐடியு மாநில துணைத்தலைவர் ஆர். சிங்காரவேல், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க  தருமபுரி கிளை செயலாளர் பி.சந்திர மொளலி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பி.கிருஷ்ணன் ஆகி யோர் வாழ்த்தி பேசினார். மாநில செயலாளர்  பி.ரவி நிறைவுறையாற்றினார். இதில், முகவர்களுக்கு குழு காப்பீடு ரூ.25  லட்சம் வழங்க வேண்டும். குழுகாப்பீட்டுக் கான வயது வரம்பை நீக்க வேண்டும். முகவர் களுக்கு சமூக பாதுகாப்பை ஏற்படுத்த வேண் டும். முன்மொழிவுக்கான மருத்துவ கட்ட ணத்தை நிர்வாகமே செலுத்தவேண்டும். அனைத்து முகவர்களுக்கும் மெடிகிளைம் பாலிசி வழங்க வேண்டும். ஆன்லைன் வணி கத்தை கைவிடவேண்டும். முவர்களுக்கு கமி ஷனை உயர்த்தி வழங்க வேண்டும். பாலிசி மீதான ஜிஎஸ்டி வரியை மக்கள் மீது திணிக்கூ டாது என  மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இறுதியில் அரூர் கிளை செயலாளர் எஸ்.தவமணி நன்றி கூறினார். பின்னர் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில், கோட்ட தலைவராக ஏ.முருகன் நாயனார், கோட்ட செயலாளராக கே.சிவ மணி, பொருளாளராக கே.லோகநாதன் உள் ளிட்ட 17 பேர் கொண்ட கோட்ட கமிட்டி தேர்வு  செய்யப்பட்டது.