தருமபுரி, ஆக.16- காலமுறை ஊதியம் வழங்க வேண் டும் என தருமபுரியில் நடைபெற்ற சத்துணவு ஊழியர் சங்கத்தின் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டுள் ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத் தின் சார்பில், சிஐடியு தருமபுரி மாவட்டக் குழு அலுவலகத்தில் வியாழனன்று, சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.தேவகி தலைமையில் கருத்தரங் கம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.தெய்வானை துவக்க உரையாற்றினார். “சத்துணவு திட்டமும் - ஆட்சியாளர்கள் நிலைப்பா டும்” என்ற தலைப்பில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.சுமதி, “சத்துணவு திட்டத்தை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் மாநிலச் செயலாளர் பி.மகேஸ்வரி, “தலைமை பண்புகள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலை வர் கோ.பழனியம்மாள் ஆகியோர் கருத்துரையாற்றினர். இதில், 40 ஆண்டுகாலமாக நிரந்தரமாக செயல்ப டுத்தும் சத்துணவு திட்டத்தில் பணிபு ரியும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்நிகழ்வில், சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் சி.காவேரி, மாவட்டப் பொருளாளர் ஆர்.ராமன் உட்பட பலர் கலந்து கொண் டனர். முடிவில், பணி ஓய்வு பெற்ற சங்கத் தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் பி.வளர்மதிக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. சங்கத்தின் தலை வர்கள் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர்.