districts

img

அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிடுக

நாமக்கல், மார்ச் 27- அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என அங்கன்வாடி ஊழியர் சங்கம் வலி யுறுத்தி உள்ளது. நாமக்கல் சிஐடியு மாவட்ட குழு அலுவலகத்தில், நாமக்கல் மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட 4 ஆவது மாநாடு ஞாயி றன்று, சங்கத்தின் மாவட்ட தலை வர் டி.கண்ணகி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் பாண்டிமாதேவி வர வேற்புரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் ஆர்.காந்திமதி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டை சிஐடியு மாவட்ட செய லாளர் ந.வேலுசாமி துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட செயலாளர் எல்.ஜெயக் கொடி, மாவட்ட பொருளாளர் (பொ) பி.பிரேமா ஆகியோர் அறிக்கையை சமர்ப்பித்தனர். இதில், சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி, மாவட்ட துணைத்தலைவர் சசி சரஸ்வதி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  இம்மாநாட்டில், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு ஊழிய ராக்கி முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூ தியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து, சங்கத் தின் புதிய மாவட்ட தலைவராக ப.பாண்டிமாதேவி, மாவட்ட செய லாளராக டி.பிரேமா, மாவட்ட பொருளாளராக பி.கலா உட்பட துணை நிர்வாகிகள் 12 பேர் உட் பட  15 பேர் கொண்ட மாவட்ட  நிர்வாக குழு தேர்வு செய்யப்பட் டது. நிறைவாக மாவட்ட துணைச் செயலாளர் டி.கலா நன்றி கூறி னார்.