தருமபுரி, மே 10- பாலக்கோடு பகுதியில் பெய்த தொடர் மழையால் தக்காளி பயிர் சேதடைந்துள்ளது. எனவே, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ள னர். தருமபுரி மாவட்டத்தில் பாலக் கோடு, ரெட்டியூர், மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, காரிமங்கலம், பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிக ளில் தக்காளி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடை மழை சில தினங்களாக ஆலங்கட்டியுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி பயி ரிட்டு உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், தக் ்காளி பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஆலங் கட்டி விழுந்ததால் தக்காளி செடி யிலே பழங்கள் வெடித்து அழுகுவ தால் விவசாயிகள் கடும் நட்டத்தை சந்தித்துள்ளனர். அதுமட்டுமல்லா மல் ஏக்கர் ஒன்றுக்கு உழவுபணி, தக்காளி நாற்று, உரம், குச்சி, ஆட் கூலி உள்ளிட்ட சுமார் ரூ.1.20 லட்சம் வரை செலவு செய்து உள்ள நிலை யில், விலை கடுமையாக சரிந்துள் ளது. மார்கெட்டில் ஒரு கிலோ தக் காளி விலை கிலோ ரூ.6 முதல் ரூ.8 வரை விற்பனையாகிறது. மழை காரணமாக தக்காளி வரத்து அதிகரித்து அதன் காரண மாக விலை குறைந்துள்ளது. இந்த விலை குறைவு தக்காளி பயிரிட்ட விவசாயிகளுக்கு, கடும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் வேதனையோடு தெரி வித்துள்ளனர். எனவே, உரிய இழப் பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தையும், தமிழ்நாடு அரசையும் விவசாயிகள் வலியு றுத்தியுள்ளனர்.