ஈரோடு, ஜூன் 27- புன்செய் புளியம்பட்டி துணை சுகாதார நிலையத்தில், கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என மாதர் சங் கம் வலியுறுத்தி உள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பவானிசாகர் தாலுகா சிறப்பு பேரவை கூட்டம், அருந்ததி தலைமையில் பவானிசாகரில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பா. லலிதா சிறப்புரையாற்றினார். சிறுபான்மை மக்கள் நலக்குழு நிர்வாகி டி.சுப்பிரமணி, அனைத்துவகை தொழிலாளர் ஐக் கிய தொழிற்சங்க நிர்வாகிகள் ஏ.பி.ராஜ், ராஜேந்திரன் ஆகி யோர் வாழ்த்தி பேசினர். இக்கூட்டத்தில், புன்செய் புளியம் பட்டி 18 வார்டுகளைக் கொண்ட நகராட்சியாகும். இங்குள்ள துணை சுகாதார நிலையம் 2 மருத்துவர்களை கொண்டு செயல் படுகிறது. இது அப்பகுதியின் மக்கள் தொகைக்கேற்ப இல்லை. எனவே கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்க வேண் டும். மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 24 மணி நேரமும் துணை சுகாதார நிலையம் செயல்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து சங்கத்தின் தாலுகா தலைவராக விஜயா, செயலாளராக அருந்ததி, பொருளாளராக சரஸ்வதி உள் ளிட்ட 11 பேர் கொண்ட தாலுகா குழு தேர்வு செய்யப்பட்டது. முடிவில், ஆர்.விஜயா நன்றி கூறினார்.