districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கு அநீதி

சேலம், பிப்.6- ஒன்றிய பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங் கிய நிதியை குறைத்த பாஜக மோடி அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஒன்றிய மோடி அரசு பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளி களுக்கு வழங்கி வந்த நிதியில் பெரும்பகுதியை குறைத்துள் ளது. 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 30 சதவிகிதம் 13,000 கோடியை குறைத்ததை கண்டித்தும், பன் னாட்டு உள்நாட்டு பெருமுதலாளிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்த மோடி அரசை கண்டித்தும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் திங்களன்று ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆத்தூர் தாலுகா செயலாளர் அழகுவேல் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணை செயலா ளர் ஏ.கந்தன், மாவட்ட குழு உறுப்பினர் சின்னதுரை, பாரதி, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகி இலா.கலைமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.