உடுமலை, ஜீன் 13- விவசாய பயன்பாட்டிற்கு நீர் நிலைகளில் இருந்து இலவசமாக வண்டல் மண் எடுக்க லாம் என தமிழ் நாடு அரசு அறிவித்தது. இதை யடுத்து, வெள்ளியன்று திருமூர்த்தி அணை யின் வலது கரை பகுதியில் வண்டல் மண் எடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலை திரு மூர்த்தி அணையின் மூலம் பல ஆயிரக்க ணக்கான விளைநிலங்கள் மற்றும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்பட்டு வரு கிறது. இந்த அணை கட்டிய நாள் முதல் தூர் வாராப்படாமல் இருந்தால், அணையின் மொத்த கொள்ளளவு நீர் தேக்கத்தில் 25 சதவீ தம் வண்டல் மண் மேடாக இருந்த வந்தது. இதனால் மழை காலங்களில் நீர் தேக்கத்தின் அளவு குறைவாக இருந்தது. மேலும் சேமிக் கப்பட வேண்டிய நீரை ஆற்று பகுதியில் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மழை நீரை சேமிக்கும் வகையில் அணையை தூர் வார வேண்டும் என்று இப்பகுதி விவசாயிக ளும், விவசாய சங்கங்களும் நீண்ட நாட்க ளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நி லையில் கடந்த சில வருடங்களாக மண் எடுக்க குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு நீர் நிலைகளில் இருந்து விவசாய பயன்பாட்டிற்கும், மண்பானைகள் செய்யவும் இலவசமாக வண்டல் மண் மற் றும் களிமண் எடுத்து கொள்ளலாம் என அனு மதி வழங்கியதையொட்டி, வெள்ளிக்கி ழமை முதல் திருமூர்த்தி அணையின் வலது கரை பகுதியில் இருக்கும் வண்டல் மண்னை எடுக்க தொடங்கியுள்ளனர். இது குறித்து விவசாயிகளிடம் கேட்ட போது, திருமூர்த்தி அணையின் வலது கரை பகுதியில் மட்டும் மண் எடுக்க அனுமதி வழங் கியுள்ளனர். அணையின் இடது கரை பகுதியி லும் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். கடந்த மாதத்திற்கு முன்பு அணையில் தண் ணீர் குறைவாக இருந்தபோதே வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியிருக்கலாம். தற் போது அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து கொண்டு இருப்பதால் நீர் மட் டம் எப்பொழுது வேண்டுமானாலும் உயரும். இதனால் முழுமையாக அணையை தூர்வார முடியாமல் போக கூடும் என்றார்கள். கனரக வாகனங்கள் மூலம் வண்டல் மண் எடுப்பதால், அணைக்கு சேதம் ஏற்படாமல் இருக்கவும், அனுமதிக்கு மேல் மண் எடுக்கா மல் இருக்கும் வகையில் பொது பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிக மேற்கொண்டு உள்ளார் கள்.