பி.ஆர்.நடராஜன் எம்பி நிதியில் உயர் கோபுரம் மின் விளக்கு பணி துவக்கம்
திருப்பூர், அக். 12 - திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சி சின்னக்காளி பாளையம் பகுதியில் புதனன்று நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 3.50 லட்சம் மதிப்பீட்டில் சூரிய ஒளியில் இயங்கும் 30 அடி உயர முள்ள உயர் கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி துவக்க நிகழ்வு நடைபெற்றது. இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கே.கணேசன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சியின் இடுவாய் தெற்கு கிளை செயலாளர் கே.கருப்பு சாமி, தி.மு.கழகத்தைச் சேர்ந்த பாசன சபை தலைவர் தங்க வேல், விவசாய சங்கத் தலைவர் சின்ன காளிபாளையம் ஈஸ்வரன், கொங்குநாடு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மண்டல பொறுப்பாளர் பொன்னுசாமி, அதிமுக சின்னக் காளிபாளையம் பாலு, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பர மேஸ்வரி சண்முகம், பூவதி, வெட்டுக்காடு நடராஜ், மார்க்சிஸ்ட் கிளைச் செயலாளர்கள் சுந்தரம், ராமமூர்த்தி, வாலிபர் சங்கம் தினேஷ், ஊராட்சி செயலாளர் ரமேஷ் உள்பட திரளாக கலந்து கொண்டனர்.
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஆட்சியர் தலைமையில் உறுதிமொழியேற்பு
கோவை, அக்.12- சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, புதனன்று கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடை பெற்ற உறுதிமொழியேற்பு நிகழ்வில் பள்ளி மாணவிகள் திரளாக பங்கேற்றனர். பாலின சமத்துவத்தை மேம்படுத்தும் வகையில், பெண் கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற் படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் அக்.11 ஆம் தேதியன்று சர்வதேச பெண் குழந்தை தினம் கொண்டா டப்படுகிறது. அதன்ஒருபகுதியாக, கோவை மாவட்டத்தில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் கையெழுத்து இயக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தை களுக்கு கற்பிப்போம்” என்பதை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உறுதிமொழியை வாசிக்க பள்ளி மாணவிகள் மற்றும் சமூக நலத்துறை பெண் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து கையெழுத்து இயக்கத்தை ஆட்சியர் துவக்கி வைத்து, பள்ளி மாணவிகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டார். முன்னதாக, கலந்து கொண்ட பள்ளி மாணவிகளுக்கு இளஞ்சிவப்பு வண்ண பேண்ட் (Band)யை கையில் கட்டிவிட்டு, இனிப்பு கள் மற்றும் பூங்கொத்தை வழங்கி சர்வதேச பெண் குழந்தை கள் தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
நிறுத்ததில் நிற்காமல் சென்ற பேருந்து நடத்துநர், ஓட்டுநருக்கு அபராதம்
கோவை, அக்.12- பேருந்து நிறுத்ததில் நிற்காமல் சென்ற இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர், நடத்து நருக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் அப ராதம் விதித்தனர். கோவை, கருமத்தம்பட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ள பகுதியாகும். மேலும், இங்கிருந்தே, சோம னூர் மற்றும் இதனைச்சுற்றியுள்ள ஏராள மான கிராமங்களுக்கு செல்ல வேண்டும். கருமத்தம்பட்டி, சோமனூர் உள்ளிட்ட பகுதி யில் இருந்து நாள்தோறும், ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கு தொழில் நிமித்தமாக சென்று வருகின்றனர். கருமத்தம் பட்டி வழியாக செல்லும் அனைத்து பேருந்து களும் கருமத்தம்பட்டி நால்ரோடு பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும். பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரி கள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால், பெரும் பாலான நேரங்களில் அரசு பேருந்துகள், தனி யார் பேருந்துகள் கருமத்தம்பட்டி நால்ரோடு பேருந்து நிறுத்தத்திற்கு வராமல், மேம் பாலத்தில் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் சென்று நெடுஞ்சாலையிலேயே பயணி களை இறக்கிவிட்டு செல்கின்றனர். மேலும், பேருந்துகள் கருமத்தம்பட்டி யில் நிற்காது என கூறுவதும், சில நேரங் களில் பேருந்துகளில் பயணிகளோடு வாக்கு வாதம் நடப்பதும் தொடர் நிகழ்வாகிப் போனது. இதுகுறித்து தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் களும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், சூலூர் வட்டார போக்கு வரத்து அதிகாரி சண்முகசுந்தரம் கருமத் தம்பட்டி பகுதியில் திடீர் ஆய்வு மேற் கொண்டார். அப்போது, திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வந்த இரண்டு அரசு பேருந்துகள் கருமத்தம்பட்டி நால்ரோடு பேருந்து நிறுத்தத்திற்கு வராமல் மேம் பாலம் வழியாக சென்று பயணிகளை நெடுஞ் சாலையில் இறக்கி விட்டது தெரியவந்தது. உடனே சம்பந்தப்பட்ட அரசு பேருந்து களை நிறுத்தி ஓட்டுநர் மற்றும் நடத்துந ருக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் அப ராதம் விதித்தார். மேலும், தொடர்ந்து அத்து மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் அரசு பேருந்து நடத்துனரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி எச்சரிக்கை விடுத்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங் களில் பரவி வருகிறது. இதுகுறித்து சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகையில், கரும்பத்தம்பட்டி பேருந்து நிலையில் பேருந்துகள் நிற்காதது குறித்து பல முறை புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. வயதானவர்கள், பெண்கள், குழந்தை களுடன் வருபவர்கள் என பலரும் பேருந்து நிற்காமல் வெகுதூரம் தள்ளி நிற்பதால் பாதிப்புக்குள்ளாகின்றனர். இப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டதைப்போல அடிக்கடி ஆய்வு மேற்கொண்டால், இது ஓரளவுக்கு பயனளிக்கும் என்றனர்.
உதகை அருகே புலி தாக்கி மாடு பலி
உதகை, அக்.12- உதகை அருகே புலி தாக்கி மாடு பலியான சம்பவத்தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் 65 சதவிகிதம் வனப்பகுதிகளாகும். இந்த வனத்தில் யானை, புலி, சிறுத்தை, மான் உள்பட பல்வேறு உயிரினங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளிவரும் விலங்குகள் ஊருக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஊட்டி தெற்கு வனச்சரகத்திற்குட்பட்ட ரிஸ்கார்னர் பிரிவு, குருத்துக்குளி பகுதியில் விவசாயிகள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றனர். இதில் சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடு மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியம் பல்வேறு பகுதிகளில் மாட்டை தேடினார். இந்நிலையில், குருத்துக்குளி வனப்பகுதியில் புலி தாக்கி மாடு இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்த தகவலின் பேரில், ஊட்டி தெற்கு வனசரகர் கிருஷ்ணகுமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மாட்டின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர் சிவசங்கர், மாட்டை உடற்கூறாய்வு செய்து, வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், இந்தப் பகுதியில் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் புலி தாக்கி பலியாகி உள்ளன. மாடு கிடைக்காவிட்டால் அந்த புலி மனிதர்களை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, புலியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், மாட்டை புலி தாக்கிதான் இறந்ததா என ஆய்வு செய்ய கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளோம். மாட்டின் உரிமையாளருக்கு நிவாரணம் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், வனவிலங்கு நடமாட்டம் குறித்து வனச்சரக்க அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அவர்களால் அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றனர்.
தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை
கோவை, அக்.12- பிரபல தொழிலதிபரான மார்ட்டின் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட் டுள்ளனர். கோவை மாவட்டம், வெள்ளக்கிணறு பிரிவில் தொழிலதிபர் மார்ட்டின் வீடு உள்ளது. இதன் அருகில் மார்டின் ஹோமி யோபதி மருத்து கல்லூரி மருத்துவமனை மற்றும் கார்ப்ரேட் அலுவலகம் உள்ளது. தொழிலதிபர் மார்டின், கேரளம் மாநிலத் தில் லாட்டரி விற்பனையில் விதிகளை மீறி ரூ.910 கோடி வருவாய் ஈட்டியதாகவும், சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய் திருந்தது. இந்நிலையில், வியாழனன்று மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோத னையில் ஈடுபட்டுள்ளனர். கடந்தாண்டு ஜூன் மாதம் அமலாக்கத் துறை சோதனையில் பல கோடி ரூபாய் மதிப் பிலான சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலை யில், தற்போது வருமான வரித்துறை அதி காரிகள் மீண்டும் தொழிலதிபர் மார்ட்டின் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின் றனர். இதேபோன்று, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசவிற்கு சொந்தமான கோவையில் உள்ள இடத்தை அமலாக் கத்துறையினர் சீல் வைத்துள்ளதாக கூறப் படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், ஒன்றிய பாஜக அரசு, ஆட்சியின் சாதனைகளை சொல்ல முடியாமல், எதிர்க் கட்சிகளை அச்சுறுத்த வேண்டும் என்பதற் காக திட்டமிட்டு திமுகவிற்கு நெருக்கமாக உள்ளவர்களின் இடங்களில் சோதனை மேற் கொள்வது அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் உள்ளவர்கள் தெரிவிக் கின்றனர்.
எம்பி நிதி ரூ.3.50 லட்சத்தில் உயர் கோபுர மின் விளக்கு பணி துவக்கம்
திருப்பூர், அக். 12 - திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சி சின்னக்காளிபா ளையம் பகுதியில் புதன்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் பி. ஆர். நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 3.50 லட் சம் மதிப்பீட்டில் சூரிய ஒளியில் இயங்கும் 30 அடி உயரமுள்ள உயர் கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி துவக்க நிகழ்வு நடைபெற்றது. இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கே.கணேசன் முன்னி லையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சியின் இடுவாய் தெற்கு கிளை செயலாளர் கே.கருப்புசாமி, தி.மு.கழ கத்தைச் சேர்ந்த பாசன சபை தலைவர் தங்கவேல், விவசாய சங்கத் தலைவர் சின்ன காளிபாளையம் ஈஸ்வரன், கொங்கு நாடு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மண்டல பொறுப்பாளர் பொன்னுசாமி, அதிமுக சின்னக்காளிபாளையம் பாலு, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பரமேஸ்வரி சண்முகம், பூவதி, வெட்டுக்காடு நடராஜ், மார்க்சிஸ்ட் கிளைச் செயலா ளர்கள் சுந்தரம், ராமமூர்த்தி, வாலிபர் சங்கம் தினேஷ், ஊராட்சி செயலாளர் ரமேஷ் உள்பட திரளாக கலந்து கொண் டனர்.
குடிநீர் தேவைக்காக கிணற்றை தூய்மைப்படுத்தி தர கோரிக்கை
திருப்பூர், அக்.12 - உடுமலை ஒன்றியம் செல்லப்பம்பாளையம் ஊராட்சி குடி நீர் தேவைக்காக மகாத்மாகாந்தி ஊரக வேலைஉறுதித் திட் டத்தில் ரூ.12லட்சம் செலவில் தேவனூர் புதூர், மயிலாடும்பா றையை அடுத்த நல்லார் காலனி பகுதியில் அமைக்கப்பட்ட சமுதாய கிணறு பணிகள் முடிந்தும் குடிநீர் விநியோகம் செய் யப்படாமல் உள்ளது. செல்லப்பம்பாளையம் ஊராட்சியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் சமுதாய கிணறு பயன்படுத்தப் படாமல் பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் அந்த பகுதியில் செந்நாய் உட்பட்ட வனவிலங்குகள் சுற்றித் திரிகின்றன. இந்நிலையில் சமுதாயகிணற்றுக்குள் அடையாளம் தெரி யாத வனவிலங்கு ஒன்று பலநாட்களாக செத்து அழுகி மிதக்கி றது. இதனால் கிணற்று நீர் மாசடைந்துள்ளது. எனவே வனத்து றையும், ஊராட்சி ஒன்றியமும் செத்த விலங்கை அப்புறப்ப டுத்தி மாசடைந்த தண்ணீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். கிணற்றுக்கான மின் இணைப்புகளை சரி செய்து குடிநீர் விநியோகத்தை சீர்படுத்த வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றிய கமிட்டி செய லாளர் கி.கனகராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஐந்து வகை பழச்செடி தொகுப்பு பெற தோட்டக்கலைத்துறை அழைப்பு
திருப்பூர், அக். 12 - மா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி மற்றும் பலா ஆகிய ஐந்து பழச் செடிகள் தொகுப்பு மானிய விலையில் வழங்கப் படுவதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து திருப்பூர் வட்டாரத்தில் தோட்டக்கலை - மலைப் பயிர்கள் துறை உதவி இயக்குநர் சுவர்ணலதா கூறி யிருப்பதாவது: தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை மூலம் பழச்செடி தொகுப்பு, திருப்பூர் பல்லடம் சாலையில் ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் அமைந்துள்ள தோட்டக் கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வரு கிறது. இதில் மா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி மற்றும் பலா என 5 செடிகள் அடங்கிய தொகுப்பு பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. பழச்செடி தொகுப்பு ஒன்றின் மொத்த மதிப்பு ரூ. 200 ஆகும். அரசு மானியம் ரூ.150, பயனாளி பங்க ளிப்பு ரூ.50. தேவைப்படும் நபர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் 7092608799, 9578844874 மற்றும் 9791891288 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பழத்தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ரூ.13.39 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அவிநாசி, அக்.12- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.13 லட்சத்து 39 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு மொத்தம் 710 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆர்.சி.எச். பி.டி. ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 6,000 முதல் ரூ.7,019 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன் றுக்கு ரூ. 2,500 முதல் ரூ.4,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.13 லட்சத்து 39ஆயிரத்துக்கு பருத்தி ஏல வர்த்த கம் நடைபெற்றது.
தேசிய நெடுஞ்சாலையில் மதுபான விடுதியை அகற்ற கோரிக்கை
திருப்பூர், அக்.12- தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மதுபான விடு தியை அகற்ற கோரி பல்லடம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். பல்லடம் நகரின் முக்கிய பகுதியான தேசிய நெடுஞ்சா லையில் தனியார் மதுபான விடுதி உள்ளது. இதற்கு முன்பு தினந்தோறும் பல வாகனங்கள் சாலையில் நிற்பதால், போக் குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி விபத்து கள் ஏற்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ் சாலைகளில் உள்ள மதுபான கடைகளை அகற்ற உத்தரவிட் டும் பல பகுதிகளில் கடைகள் அகற்றப்படாமல் உள்ளன. இப் பகுதில் நீதிமன்ற தீர்ப்பையும் பின்பற்றாமல் தேசிய நெடுஞ்சா லையில் இரண்டு தனியார் மதுபான விடுதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நெட்வின் மற்றும் கொக்கரக்கோ என்ற பெயரில் விடுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த கிளப்பில் உறுப்பினராக இருக்கும் நபர்கள் மட்டுமே இங்கு மது அருந்த முடியும். உறுப்பினர் இல்லாத நபர்களுக்கு சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வருகின்றனர். மேலும் பல லட்சம் ரூபாய்க்கு சட்ட விரோதமாக தினந்தோறும் மது விற்பனை செய்யப்படுகிறது. நெட்வின் மதுபான கடை கோவை செல் லும் தேசிய நெடுஞ்சாலையில் கொங்கு திருமண மண்டபம் எதிரில் உள்ளது. கொக்கரக்கோ மதுபான கடை பல்லடம் நால் ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியில் செயல் பட்டு வருகிறது. இந்த இரு தனியார் மதுபான விடுதி களையும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து அகற்ற நட வடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூடுதல் போனஸ் வழங்க சிஐடியூ சுமைப்பணி சங்கம் கோரிக்கை
திருப்பூர், அக். 12 - சுமைப் பணி தொழிலாளர்களுக்கு, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப போனஸ் தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிஐடியூ திருப்பூர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்க கமிட்டிக் கூட்டம் அக்டோ பர் 10 அன்று சங்க தலைவர் எம்.ராஜகோ பால் தலைமையில் நடைபெற்றது. கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. விலைவாசி உயர்வு கடுமையாக உயர்ந்துள்ளது. தீபா வளி பண்டிகை கொண்டாட போனஸ் தொகையை தொழிலாளர்கள் நம்பி யுள்ளார்கள். எனவே கடந்த ஆண்டு வழங்கி யதை விட போனஸ் தொகையை கணிசமாக உயர்த்தி வழங்க வியாபார நிறுவனங்கள் முன்வர வேண்டும். தீபாவளிக்கு 10 நாட்க ளுக்கு முன் போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கம் (சிஐடியூ) கேட்டுக் கொண்டுள்ளது. பிரச்சினைகள் இருக்கும் பகுதி சுமைப்பணி தொழிலாளர் கள் சங்கத்தை அணுகும்படி சங்கத்தின் செய லாளர் கே.உன்னிகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நீதி கேட்டு வந்தால் அதிகாரத் தோரணையில் மிரட்டுவதா? வீரபாண்டி காவல் ஆய்வாளருக்கு சிபிஎம் கண்டனம்
திருப்பூர், அக்.12- பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்க சென்ற மாதர் சங்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகளிடம் அதிகார தோரணையில் நடந்து கொண்ட வீரபாண்டி காவல் நிலைய ஆய்வாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள் ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துகண் ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, திருப்பூர் மாநகரம் வீரபாண்டி காவல் நிலையத்தில் அக்டோபர் 4ஆம் தேதி வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு நிறு வன உரிமையாளர் ராஜேஷ் என்பவர் மீது, தரமற்ற வீட்டு உபயோக பொருள் வழங்கி யதை ஒட்டி கேள்வி எழுப்பியதால் தகாத முறையில் பேசியது தொடர்பாக கௌசல்யா என்ற பெண் புகார் அளித்துள்ளார். இதன் மீது உரிய நியாயம் கிடைக்காத நிலையில், மாதர் சங்கத்தினரிடம் தனக்கு நடந்த அநீதி யைக் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அக்.12ஆம் தேதி மாதர் சங்க மாவட்ட நிர் வாகிகள் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன் னணி நிர்வாகிகளும் கௌசல்யாவுடன் நியா யம் கேட்க வீரபாண்டி காவல் நிலையத் திற்கு சென்றுள்ளனர். அப்போது காவல் ஆய் வாளர் நீங்கள் யார் இதை விசாரிப்பதற்கு, ஏற் கனவே பல அமைப்புகள் வந்துள்ளனர் என்று தகாதமுறையில் பேசியுள்ளார். பாதிக்கப்ப ட்டவர்களுக்கு நியாயம் கேட்க வருபர்க ளிடம் ஏன் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட் டச் செயலாளர் சி.கே.கனகராஜை கைது செய்து சிறையில் அடைப்பேன் என்று மிரட்டி உள்ளார். இதையடுத்து காவல் நிலையத் திற்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் காவலர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வரும் 14ஆம் தேதிக்குள் சம்மன் அனுப்பி உரிய விசாரணை மேற்கொள்ளப்ப டும் என்று காவல் துறையினர் தெரிவித்துள் ளனர். இப்படி பாதிக்கப்பட்டவர்களுடன் நியாயம் கேட்க வந்தவர்களிடம் அதிகாரத் தோரணையில் நடந்து கொண்ட காவல் ஆய் வாளரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. உரிய விசாரணை நடத்தி நியாயம் வழங்க வேண்டும் என கோரி சென்ற தலைவர்களிடம் மரியாதை குறைவாகவும், அதிகாரத் தோர ணையிலும் நடந்து கொண்ட காவல் ஆய்வா ளர் மீது மாநகர காவல் துறையும், தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என கூறப்பட்டுள்ளது.
ஈரோட்டில் இன்று சிறப்பு கருத்தரங்கம்
ஈரோடு, அக்.12- இந்தியா ஜனநாயக மதச்சார்பற்ற சோசலிச குடியரசு - அரசியல் சாசன விழுமியங்களைப் பாதுகாப்போம் என சிறப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்திய நாட்டையும், மக்களையும், ஒருமைப்பாட்டையும் காத்திடுவோம். சிறு, குறு, நடுத்தர தொழில்கள், விவசாயம் ஆகியவற்றைக் காப்போம் என வெள்ளியன்று (இன்று) ஈரோடு, பூந்துறை சாலையில் உள்ள ஏ.எம்.திருமண மஹா லில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில், கேரள உள்ளாட்சித்துறை அமைச்சர் எம்.பி.ராஜேஸ் வண்ணங்கள் வேறு எண்ணங்கள் ஒன்றே என்ற தலைப்பில் உரையாற்று கிறார். மரபுகளை மறுத்த பாராளுமன்றம் என்ற தலைப் பில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உரையாற்றுகிறார். பெண்ணியமும், அரசியல் சூழலியலும் என்ற தலைப்பில் திரைக்கலைஞரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைத்தலைவரு மான ரோகிணி கருத்துரையாற்றுகிறார். தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், மத்திய, மாநில அரசு, பொதுத்துறை ஊழியர்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் - வர்த்தகர்கள் கூட்டமைப்பினர் இக்கருத்த ரங்ககை ஏற்பாடு செய்துள்ளனர்.
தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
தருமபுரி, அக்.12- தொடர் மழையால் தருமபுரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், புதுக் கோட்டை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வந்தது. அதன்படி, புதனன்று காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், மாலை தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, அரூர், தீர்த்தமலை, பொய்யப் பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங் களில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து திடீரென மழை பொழிந்ததால் விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
போக்சோ வழக்கு: 20 ஆண்டு சிறை
ஈரோடு, அக்.12- ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் (41), என்ப வர் 17 வயது சிறுமியைக் கட் டாயத் திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்த வழக் கில் கணேசன் 2021 ஆம் ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மகளிர் நீதிமன்றத் தில் நடைபெற்று வழக்கில் வியாழனன்று தீர்ப்பளிக்கப் பட்டது. அதில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை யும், ரூ.5 ஆயிரம் அபராத மும் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்டவ ருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத் தரவிட்டது.