districts

பயிற்சிக்காக பாகன்கள் தாய்லாந்து செல்கின்றனர்

உதகை, டிச.5- நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலி கள் காப்பகம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தை சேர்ந்த யானை பாகன்கள் பயிற்சிக்காக தாய்லாந்து செல்ல உள்ளதாக தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்தி ரன் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிகளவி லான காட்டு யானைகள் உள்ளன. அதே போல், இங்கு முகாம்கள் அமைக்கப்பட்டு யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பல  கும்கி யானைகள் இந்த முகாம்களில் உள் ளன. யானைகளை பராமரிக்கும், வளர்க்கும் பணிகளில் இங்குள்ள இருளர், குறும்பர் போன்ற பழங்குடியின மக்களே மேற் கொள்கின்றனர். இவர்கள் தங்களுக்கு என்ற ஒரு யானையை தேர்வு செய்து, அதனை பிறந்தது முதல் இறப்பு வரை பராமரித்து வரு கின்றனர். மேலும், யானை பாகன்கள் என்ன சொல்கிறார்களோ அதற்கே அந்த காட்டு  யானைகள் கட்டுப்படுகின்றன.

முதுமலை யில் உள்ள பல யானைகள் தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வந்த போதிலும், இங்கு அவைகளுக்கு முறை யான பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவை கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்குள்ள பாகன்கள் மற் றும் காவடிகளுக்கு (பாகன்களின் உதவியா ளர்கள்) யானை வளர்ப்பில் பல புதிய யுக்தி களை கையாளும் வகையில் பயிற்சி அளிக் கப்பட உள்ளது. இதற்காக அவர்கள் தாய் லாந்து நாட்டிற்கு அனுப்பப்படவுள்ளனர். இவர்களுக்கு அங்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக நீல கிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்ப கத்தை சேர்ந்த 7 பாகன்களுக்கும். ஆனை மலை புலிகள் காப்பகத்தை சேர்ந்த பாகன் களுக்கும் தாய்லாந்து நாட்டில் பயிற்சி அளிக் கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக வனத்துறை அமைச் சர் கா.ராமச்சந்திரன் கூறுகையில், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கோவை மாவட் டத்திற்குட்பட்ட ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் உள்ள யானை பாகன்கள் தேர்வு செய்யப்பட்டு, தாய்லாந்து நாட் டிற்கு அனுப்பப்பட உள்ளனர். அங்கு அவர் களுக்கு யானைகள் வளர்ப்பது, பராமரிப் பது தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்கான செலவுகளை வனத்துறையே ஏற் கும், என்றார்.