திருப்பூர், நவ.29- திருப்பூர் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இந்தி தகவல் பலகை, பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அகற்றப்பட்டது. திருப்பூர் ரயில் நிலையத்தில் தகவல் மையத்தின் முகப்பில் வழக் கமாக தமிழில் தகவல் மையம் என்றும், ஆங்கிலத்தில் இன்பர் மேஷன் சென்டர் என்றும் எழுதப் பட்டிருக்கும். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அந்த முகப்பில் இருந்த எழுத்துக்களை மறைத்து “சகயோக்” என ஆங்கி லம், இந்தி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே வார்த்தை யைக் குறிப்பிட்டு பிளக்ஸ் தட்டி ஒட்டப்பட்டது. இதனால் இங்கு வந் தவர்களுக்கு, இந்த வார்த்தை புரி யாமல் குழப்பம் அடைந்தனர். பய ணிகள் ரயில் மற்றும் டிக்கெட் விப ரங்களை அறிந்து கொள்ள எங்கே செல்வது என்று தெரியாமல் திண றினர். திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தி தகவல் பலகை வைக்கப்பட்ட விபரம் சமூக ஊடகங்களில் காட் டுத் தீ போல் பரவி பலத்த எதிர்ப்பை கிளப்பியது. அந்தந்த மொழியில் விபரம் எழுதப்பட்டிருந்தால் அனை வரும் புரிந்து கொள்ளும்படியாக இருந்திருக்கும். ஆனால் இந்தி மொழியில் பயன்படுத்தும் அதே வார்த்தையையே மூன்று மொழி களிலும் எழுதி வைத்திருப்பது ஒன் றிய பாஜக அரசின் அப்பட்டமான இந்தித் திணிப்பு முயற்சியாகும் என்று அங்கிருந்த அனைவரும் ஏகமனதாக கருத்துத் தெரிவித்த னர். பல்வேறு அரசியல் கட்சிகள், பொது நல அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், செவ் வாயன்று சகயோக் என்ற தகவல் பலகை அகற்றப்பட்டது. காசி தமிழ்ச்சங்கமம் என்று தமிழ் மொழி மேல் பற்று இருப்பது போல் காட்டிக் கொண்டு, உள்ளூ ரிலேயே தமிழை ஒழித்துக் கட்டும் வேலையை ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர் என்றும் மக் கள் கடுமையாகச் சாடினர்.