கோவை, ஏப்.29- மூலப்பொருட்களின் கடுமையான விலை உயர்வால் தொழில்கள் பதிக்கப்பட்டிருப் பதால் இந்தியாவிலிருந்து மூலப்பொருட் களின் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் வலியுறுத்தி கோவை தொழில் துறையினர், ஒன்றிய தொழில் துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்து கொடிசியா அமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது, கோவை தொழில் துறை அமைப்புகளின் தலைவர்களை கொண்ட குழு கடந்த ஏப்.27 ஆம் தேதியன்று ஒன்றிய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறை அமைச்சர் நாராயண் டி ரானேவை, தில்லி யில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித் தனர். அப்போது, தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களின் கடுமை யான விலை உயர்வை உடனடியாக கட்டுப் படுத்தக் கோரி வேண்டுகோள் விடுத்தனர். மேலும், உள்நாட்டு விலையைவிட, ஏற்று மதி செய்யப்படும் ஸ்டீல் போன்ற மூலப் பொருளின் விலை குறைந்தது
10 சதவிகித மாவது அதிகமாக இருக்க வேண்டும். ஆகவே உடனடியாக எல்லா மூலப்பொருட் களின் ஏற்றுமதிக்கும் தடைவிதித்து உள் நாட்டில் நிலைமையை சீராக்க வேண்டும். வரிகள் ஏதும் இல்லாமல் மூலப்பொருளை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்க வேண் டும். கடந்த 2 ஆண்டுகளில் மூலப்பொருள் உற்பத்தி செய்யும் பெரு நிறுவனங்கள் நல்ல லாபம் ஈட்டியுள்ள அதேநேரத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங் களுக்கு போதியளவு வருமானம் இல்லை. இதில், ஒரு சமநிலை எட்டப்பட வேண்டும். வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களுக்கு ஐஎஸ்ஐ மார்க் தேவை என்று கட்டாயப்படுத்தக்கூடாது. விலை யேற்றம் காரணமாக சிறு தொழில் நிறுவனங் கள், இரண்டாம் தர மூலப்பொருட்களை பயன்படுத்துவதால் பொருட்களின் தரம் குறையும். மூலப்பொருள் உற்பத்தி செய் யும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியில் 50 சதவிகித பொருட்களை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிலகங்களுக்கு வழங்க வேண் டும். இந்த சிக்கலை தீர்க்கும் வகையில் தேசிய சிறுதொழில் கழகம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலை களுக்கு வழங்கிய ஆர்டரை தொடர வேண் டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது. இதேபோன்று ஒன்றிய உருக்குத்துறை அமைச்சர் ராம்சந்திர பிரசாத் சிங் மற்றும் வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரையும் சந்தித்து கோவை மாவட்ட தொழில்துறையினர் மனு அளித்தனர்.