districts

img

ஜவுளித்துறை பிரச்சனையை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல சிபிஎம் எம்.பி.,களிடம் தொழில் துறையினர் கோரிக்கை

திருப்பூர், பிப். 14- பின்னலாடை, விசைத்தறி உள்ளிட்ட ஜவுளி  தொழில் சந்திக்கும் பிரச்சனைகளை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தொழில்து றையினர் கேட்டுக் கொண்டனர். திருப்பூர் ராயபுரத்தில் உள்ள தனியார் விடுதி யில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொழில் துறையினர் கலந்துரையாடல் கூட்டத்தில் பங் கேற்ற தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் தங் கள் கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். சைமா தலைவர் ஏசி.ஈஸ்வரன் கூறிய தாவது: பின்னலாடை விசைத்தறி உள்ளிட்ட அனைத்து ஜவுளி தொழில்களுக்கும் பஞ்சு நூல்  அடிப்படை மூலப் பொருளாகும். விவசாயிக ளுக்கு நியாயமான விலை கொடுத்து கொள்மு தல் செய்து தொழில்துறையினருக்கு வழங்க வேண்டும்.

இதில் பெரும் கார்ப்பரேட் இடைத்த ரகர்கள், வர்த்தக சூதாடிகள் கொள்ளையடிப் பதை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு மார்க் சிஸ்ட் கட்சி எம்பி.,்கள் ஒன்றிய அரசிடமும், நாடாளு மன்றத்திலும் உரிய தலையீடு செய்ய வேண் டும். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கப் பொருளா ளர் திருக்குமரன் பேசியதாவது: ஏற்றுமதி சிறு, குறு தொழில்களுக்கான வட்டி மானியத்தை 5 சத வீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் வழங்கப்பட்டது போல  அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தை உடன டியாக தற்போது வழங்க வேண்டும். பிரிட்டன்  கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளு டன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த  வேண்டும். தொழிலாளர்களுக்கான இ எஸ் ஐ மருத்துவமனையை விரைவில் கட்டி முடிக்க வேண்டும்,

தொழிலாளர் குடியிருப்புகளை கட்டிக் கொடுக்க வேண்டும், என்று கேட்டுக் கொண்டார். நிட்மா தலைவர் அகில் சு. ரத்தினசாமி கூறிய தாவது: வருங்காலத்தில் பருத்தி ஆடைக ளுக்கு பதிலாக செயற்கையிழை ஆடைகள் அதி கரித்து வருகின்றன. அதில் தொழில் துறையில்  ஈடுபடுவதற்கு அரசுகள் உதவ வேண்டும்.கோவையை மையப்படுத்தி மெட்ரோ ரயில் திட் டம் கொண்டு வருவதில் திருப்பூரை இணைக்க  வேண்டும். தமிழ்நாடு பருத்தி கழகம் உருவாக்கி  மில்களுக்கு உரிய அளவு பஞ்சு கிடைக்க ஏற்பாடு  செய்ய வேண்டும். திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் முருகசாமி பேசிய தாவது: வேறு எங்கும் இல்லாத அளவிற்கு திருப் பூரில் சாய ஆலைகளில் 12 கோடி லிட்டர் தண் ணீர் மறுசுழற்சி தொழில்நுட்பத்தில் பயன்படுத் தப்படுகிறது. இதற்கு அதிக அளவு செலவாகி றது. எனவே சாய ஆலைகளுக்கு மின்சார மானி யம் வழங்க வேண்டும். ஜிஎஸ்டி விலக்கு அளிக்க  வேண்டும். ஒன்றிய மாநில அரசுகள் நிதிநிலை அறிக்கை முன்பாக எங்களைப் போன்ற தொழில்  துறைகளுடன் கலந்து ஆலோசனை செய்து உரிய திட்டங்களை அறிவிக்க வேண்டும். டீமா சங்கத் தலைவர் எம் பி முத்துரத்தி னம் பேசியதாவது: திருப்பூரில் 90% சிறு குறு  நடுத்தர நிறுவனங்களாக இருக்கின்றன. இத் தொழில்களை பாதுகாக்க அரசிடம் எந்தத் திட்ட மும் இல்லை. இந்த சிறு தொழில்களை பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் வேலுச்சாமி: தற்போ தைய நெருக்கடியான சூழ்நிலையில் 30 சதவீதம்  விசைத்தறிகள் மட்டுமே இயங்குகின்றன. தமிழ் நாட்டு எம்பி.,கள் இத்தொழிலை பாதுகாக்க குரல்  கொடுக்க வேண்டும். சிறப்பு காப்பீட்டு திட்டம்  வேண்டும். காம்பெக்ட்டிங் சங்க செயலாளர் வி ஈஸ்வர மூர்த்தி பேசியதாவது: நாங்கள் ஒவ்வொருவ ரும் இரண்டு தொழில் செய்கிறோம். ஒரு தொழில்  எப்போதும் செய்து கொண்டிருக்கும் ஜவுளி  தொழில். இன்னொன்று இதை காப்பாற்றுவ தற்காக தொடர்ந்து கோரிக்கை வைப்பது ஒரு  தொழிலாக உள்ளது. சிறு குறு நடுத்தர தொழில் களுக்கான மானியத் திட்டம் கொண்டு வர வேண் டும்.

தொழில் துறையினருக்கு எரிவாயு குழாய்  மூலம் கொண்டுவரும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பவர் டேபிள் சங்க தலைவர் ஆர். நந்தகோ பால்: ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு இ வே பில்  கேட்பதை விலக்களிக்க வேண்டும். மின்சார  வாரியம் வழங்க வேண்டும், மின் கட்டணத்தில்  பீக் அவர், நிலை கட்டணம் கைவிட வேண் டும். இக்கூட்டத்தில் காஜா பட்டன் சங்க தலைவர்  ருத்ரமூர்த்தி, டீமா சங்க நிர்வாகி செந்தில் வேல்,  ஏற்றுமதியாளர் சங்க இணை செயலாளர் குமார்,  விசைத்தறியாளர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பேசினார். தொழில்துறையினர் கோரிக்கைகளை ஒன் றிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக வும், நாடாளுமன்றத்தில் பிரச்சனை எழுப்புவதா கவும் மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பி னர்கள் பி .ஆர் .நடராஜன், சு.வெங்கடேசன் ஆகி யோர் கூறினர்.