திருப்பூர், டிச.27- திருப்பூரில் மின் கட்டண உயர்வு, பீக் ஹவர் கட்டண உயர்வினை ரத்து செய்ய வலி யுறுத்தி மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் புதனன்று மனிதச் சங்கிலி போராட்டம் நடை பெற்றது. தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்ட ணம், மற்றும் பீக் ஹவர் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. இதைக் கண்டித்து மின் நுகர் வோர் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் குமரன் சிலை முதல் மாநகராட்சி வரை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில், திருப்பூ ரைச் சேர்ந்த தொழில் அமைப்பினரைக் கொண்ட 37 சங்கங்கள் பங்கேற்றுள்ளனர். திருப்பூர் குமரன் நினைவகம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை தொழிலாளர் கள், தொழில்துறை அமைப்பைச் சேர்ந்த வர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனிதச் சங்கிலியாக கை கோர்த்து நின்றும், பதாகைகளை ஏந்தியும் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தினர். இதுகுறித்து டீமா சங்கத் தலைவர் முத்து ரத்தினம் கூறுகையில், இந்த மின் கட்டண உயர்வை கண்டித்து 120 நாட்களுக்கும் மேலா கப் போராடி வருகின்றோம். இந்தியாவில் சிறு, குறு தொழில்களில் தமிழ் நாடு இரண் டாம் இடத்தில் உள்ளது. மின் கட்டண உயர் வால் அந்த இடத்தை நாம் இழக்க நேரிடும் வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 37 தொழில் அமைப்புகள் இணைந்து மின் கட்டண உயர்வுக்கு எதிராக 8 கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழக அரசு தொழில் துறையினரைக் கண்டு கொள்ளாமல் இருப் பது வேதனை அளிக்கிறது. திருப்பூரில் 70 சதவீத தொழில்கள் மூடப்பட்டுள்ளன, தொழில்துறையினர் அழைத்து தமிழக முதல் வர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். வரும் 10 ஆம் தேதிக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் எனத் தெரிவித் தார். திருப்பூர் சிறு, குறு உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முகமது சபி கூறுகையில், நூல் விலை ஏற்றம், தமி ழகத்திற்கு வட மாநிலங்களிலிருந்து அதிகள வில் பாலிஸ்டர் நூல் வரத்து, பருத்தி உற்பத்தி பாதிப்பு ஆகியவையால் திருப்பூர் நலிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் மின் கட்ட ணம் யூனிட்க்கு 7 ரூபாயில் இருந்து 9 ரூபா யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 50 நபர்கள் வேலை செய்யக் கூடிய சிறு நிறுவனம் மாதம் 50 ஆயிரம் மின் கட்டணம் கட்டி வந்த சூழலில் இப்போது 65 ஆயிரம் கட்ட வேண்டியுள்ளது. ஆண்டுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கூடுதலாக மின் கட்டணம் அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் 6 மாத காலத்தில் திருப் பூரின் உள்நாட்டு உற்பத்தி முற்றிலும் பாதிப்ப டையும். மேலும், உள்நாட்டு ஏற்றுமதியும் பாதிப்படையும். தமிழக முதல்வர் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரி வித்தார்.