திருப்பூர் மருதாசலபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கே.மகேந்திரன் மகள் எம்.எழிலரசி அண்மையில் நேபாளத்தில் நடைபெற்ற இந்தோ நேபாள் உலக விளை யாட்டுப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்த தங்க மங்கையை பாராட்டி கௌரவிக்கும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருப்பூர் வடக்கு மாநகர நிர்வாகிகள் துரை சம்பத், கண்ணன், பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் எழிலரசி இல்லத்திற்க்கு சென்று சால்வை அணி வித்து பாராட்டி கௌரவித்து மகிழ்ந்தனர்.