சேலம், டிச.10- தேசிய கல்விக் கொள்கை 2020 திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்திய ஆசிரியர் கூட்ட மைப்பு சார்பில் ஆத்தூர் மற்றும் தாரமங்கலம் பகுதிகளில் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு முடிவின்படி தேசிய கல்விக் கொள்கை 2020 ரத்து செய்ய வேண்டும், தன் பங்கேற்பு ஓய்வூதிய திட் டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி குடியரசு தலைவரிடம் அளிப்பது என்ற முடிவின் அடிப்படையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் தாரமங்கலம் பகுதிகளில் இந்திய ஆசிரியர் கூட்ட மைப்பு சார்பில் மாவட்ட தலைவர் ஜான் பிரேம்குமார் தலைமையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆரம் பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட துணை தலைவர் ஆர்.ரஹீம், மு. மாயகிருஷ்ணன், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்க சட்ட செயலாளர் மோகன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் எஸ். கணேசன், மாவட்ட செயலாளர் ந. பெரியசாமி உள்ளிட்டு பலர் பங்கேற்றனர். கோவை இதேபோன்று கோவை- மேட்டுப் பாளையம் காரமடையில், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு பிரச்சார இயக்கம் நடை பெற்றது. இதில், திரளானோர் பங்கேற் றனர்.