districts

img

இந்திய வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும்!

ச.தமிழ்ச்செல்வன் பேச்சு
 

ச.தமிழ்ச்செல்வன் பேச்சு திருப்பூர், ஜன.31- இந்திய வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும். அறிவியல் ரீதி யான, வரலாற்று ரீதியான உண்மை யான பெருமிதத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எழுத்தா ளர் ச.தமிழ்ச்செல்வன் கூறினார். திருப்பூர் புத்தகத் திருவிழாவில் வியாழனன்று நடைபெற்ற நிகழ் வில், “சிந்துவெளி நாகரிகம் - 100” என்ற தலைப்பில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் கருத்துரை ஆற்றி னார். அப்போது அவர் கூறியதாவது, இன்றைய நோய்களுக்கு என்ன கார ணம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் கடந்த கால வர லாறு தெரிய வேண்டும். சிந்துவெளி நாகரிகம் வெளி உலகத்திற்கு அறி விக்கப்பட்டு நூறாண்டு ஆகிறது. இந் தியாவில் தமிழ்நாட்டில் கொண்டா டிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு மட்டும்தான் கொண்டாடிக் கொண்டி ருக்கிறது.  சிந்துவெளி நாகரிகம் செழித்து ஓங்கி இருந்த காலகட்டம் கிமு 2600 முதல் கிமு 1900 வரை. அதே காலத் தில் இருந்த சுமேரியா நாகரிகம், நைல் நதி நாகரிகம் ஆகியவற்றின் சமகால நாகரிகமாகும் சிந்து வெளி நாகரிகம். அதுவும் நகர நாகரிகமாக இருந்துள்ளது. இதன் சிறப்பு என்ன வென்றால் ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம் உள்ளிட்ட வடமேற்கு  இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ் தான் வரை 15 லட்சம் சதுர கிலோ மீட்டர் அளவிற்கு பரவியுள்ளது. வேறெந்த நாகரிகமும் இந்த அளவு  பெரும் நிலப்பரப்பில் இருக்க வில்லை.  இந்தப் பகுதி முழுவதும் கண்ட றியப்பட்ட பொருட்கள், சுட்ட செங்கற் கள் ஆகியவை ஒரே மாதிரி இருக் கின்றன. மற்ற நாகரிகங்களில் கோவில், மன்னர்களின் அரண் மனை உள்ளிட்டவை இருக்கின்றன. ஆனால் சிந்துவெளி மக்கள் சார்ந்த  உயர் நாகரிக சமூகமாக இருந்துள் ளது. கீழடி அகழ்வாய்வில் கண்ட றியப்பட்ட பொருட்களும் அவற்று டன் ஒத்துப் போகின்றன. சில அறி ஞர்கள் சிந்துவெளி நாகரிகத்தையும் இதையும் ஒரே நாகரிகம் என்று அவ சரப்பட்டு முடிவு செய்ய முடியாது. இன்னும் அகழாய்வு செய்து பார்க்க  வேண்டும் என்று கூறுகிறார்கள்.  தோண்டத் தோண்ட வரலாறு துலங்கும். அதே சமயம் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போல  போன்ற அறிஞர்கள் சிந்துவெளி யின் எழுத்துக்கள், திராவிட மொழிக ளோடு தான் ஒத்துப் போகின்றன என்று கூறுகின்றனர்.  திராவிட மொழிக் குடும்பம் என்பது தமிழ்,  தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு மட்டுமல்ல, திராவிட மொழிக் குடும்பத்தில் 25 மொழிகள் இருப்ப தாக பிஷப் கால்டுவெல் கூறி இருக் கிறார்.  சிந்துவெளி மொழியை இன்னும்  வாசிக்க முடியாமல் இருக்கும் நிலை யில், வெவ்வேறு தரவுகள் தொழில் நுட்பங்களைக் கொண்டு சிந்துவெளி  நாகரிகத்தின் தன்மையை தெரிந்து கொள்ள பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் ஆய்வு செய்தார்.  அதில் 10 புள்ளிகள் கொண்ட கனசதுர பகடைகள் சிந்துவெளியில் கிடைத்தது, கீழடி யிலும் கிடைக்கிறது. சங்க இலக்கி யத்திலும் 10 புள்ளி பகடைகள் பற்றி பாடல் வருகிறது. அதேபோல் சிந்து வெளியில் இருந்த 1:2:4 என்ற விகிதத் தில் ஆன சுட்ட செங்கற்கள் கீழடியி லும் கிடைக்கிறது. ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு என்று தற்போதும் இருக்கும் விளையாட்டு சிந்துவெளி யிலும் சின்னமாக உள்ளது. கீழடி யிலும், சங்க இலக்கியத்திலும் அவை உள்ளன. சேவல் சண்டை என்பதும் ஒத்துப் போகின்றன. தாய் தெய்வ வழிபாடும் சிந்துவெளி நாக ரிகம், இங்கு கண்டறியப்பட்ட நாகரி கமும் ஒத்துப் போகிறது. திராவிட  இனம் என்பது சப்பை மூக்கு கொண்ட  கருப்பர்களாக இருந்துள்ளனர். தற்போது தூய திராவிட இனம் இருப் பதாக சொல்ல முடியாது. பல்வேறு இனங்கள் கலந்த கலப்பினமாகத் தான் தற்போது உள்ளது. தொல் கலாச்சாரத்திற்கு இணையான எழுத்து வடிவம் இங்கு மட்டும்தான் கிடைக்கிறது. வேறு எங்கும் கிடைக் கவில்லை.  

இந்திய வரலாற்றை எழுதுவ தென்றால் தெற்கிலிருந்து அது தமிழ் நாட்டில் இருந்து தொடங்கி எழுதப் பட வேண்டும். அண்மையில் சிவக் களையில் இரும்பு நாகரீகம் 5300  ஆண்டுகளுக்கு முன் இருந்திருப் பதை கண்டுபிடித்திருக்கிறோம். இந்திய நாகரிகம் வேத நாகரிகம்  என்று கற்பித்து இருக்கிறார்கள்.  ஆனால் வேத காலம் என்பது கிமு 1700  - கிமு 1500 காலத்தை சேர்ந்தது.  அதற் கும் தொன்மையானது சிந்துவெளி  நாகரிகம். உண்மையான வர லாற்றை முழுமையாக மாற்றி எழுத  வேண்டி இருக்கிறது. இதுவரை  இந்திய வரலாற்று ஆய்வாளர்கள்  மனதில் தெற்கு இருக்கவில்லை.  தப்பான  வரலாற்றை பேசுவோர்  குழப்புவார்கள். நமக்கு போலியான  இனப்பெருமிதம் வேண்டிய தில்லை. ஆனால் அறிவியல் ரீதி யாக, வரலாற்று ரீதியாக உண்மை யான பெருமிதம் தெரிந்து கொள்ள  வேண்டும். இதை நம் கல்வியிலும்  போதிக்க வேண்டும், என்றார். இந்நிகழ்வில், ‘பக்கம் பக்கமாய்  வாழ்க்கை’ என்ற தலைப்பில் பேசிய கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம், உலக இலக்கியங்களில் உள்ள பல் வேறு ஆளுமைகளின் கதைகளை சொல்லி, பசிக் கொடுமைக்கு எதிராக இலக்கியம் படைப்பதையும், மனிதநேயத்தையும் வலியுறுத்தி னார். அறிவுள்ள சமூகத்தை படைக்க புத்தக வாசிப்பு அவசியம், என் றார். முன்னதாக, நிகழ்வுக்கு பல்ல டம் பிகேஎஸ் குழும நிர்வாகி எம். செந்தில் குமார் தலைமை வகித் தார். எஸ். கௌரிசங்கர் வரவேற்றார். ஓகே டெக்ஸ் எம்.கந்தசாமி, பி.வி. எஸ்.நிட்டிங் பி.முருகசாமி, வழக்கறி ஞர் பொ.மோகன், வேலன் குழுமம் எம்.ஆர்.கௌதம், ஈஷா குழுமம்  சார்பில் வழக்கறிஞர் உமர் கயான், பொறியாளர் ஸ்டாலின் பாரதி உள் ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வருவாய் கோட்டாட்சியர் மோகன சுந்தரம் கலந்து கொண்டார்.  முன்னதாக மன்னரை மாநக ராட்சி நடுநிலைப்பள்ளி, அங்கேரி பாளையம் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ,  மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடை பெற்றது. பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆர்.ஷாலினி நன்றி கூறினார்.