கோவை, பிப்.24- கோவை, காமராஜபுரத்தில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம், சங்கரா கண் மருத்துவ மனை மற்றும் மீனாட்சி நர்சிங் ஹோம் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோ தனை முகாமில் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர். இந்த முகாமிற்கு, வாலிபர் சங்க கோவை கிழக்கு நகரக்குழு தலைவர் ராகுல் தலைமை தாங்கினார். செயலாளர் பி.அஜீத் குமார் வர வேற்புரையாற்றினார். இதில், எல்ஐசி முரளி தரன், சிபிஎம் கிளை செயலாளர் பி.ராம சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை,மார்க்சிஸ்ட் கட்சியின் காமராஜ புரம் பகுதி முன்னாள் மாமன்ற உறுப்பினர் என்.முருகேசன் துவக்கிவைத்தார். இந்த முகாமில் சங்கரா கண் மருத்துவ மனை மருத்துவர் நயானா, மீனாட்சி நர்சிங் ஹோம் செவிலியர் வீரலட்சுமி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பங்கேற்று பரிசோ தனை மற்றும் ஆலோசனை அளித்தனர். இதில், 70க்கு மேற்பட்டவர்கள் கண் பரி சோதனை செய்து கொண்டனர், பரிசோ தனை செய்யப்பட்டவர்களில் பாதிப்பு உடையவர்களை கண்டறிந்து, 19 பேர் அறுவை சிகிச்சை செய்துகொள்ள மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்க அழைத்த சென் றனர்.