districts

img

இந்தியன் வங்கி ஊழியர்கள் தர்ணா

கோவை, டிச.23- வங்கித்துறையில் காலியாக உள்ள 3 ஆயிரம் பணியிடங் களை நிரப்ப வேண்டும். வங்கி பணிகளை அவுட்சோர்சிங் என்ற பெயரில் தனியாருக்கு தரக்கூடாது. பொதுத்துறை வங் கிகளை சீர்குலைப்பதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.  பத்தாண்டுகளாக தற்காலிக ஊழியர்களாக பணிபுரிபவர் களை, நிரந்தரம் செய்ய வேண்டும். தற்காலிக கடைநிலை ஊழியர்கள், தற்காலிக துப்புரவாளர்களை உடனடியாக நிரந்தரம் செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா நடைபெற்றது.  கோவை சிவானந்தா காலணி அருகே நடைபெற்ற தர்ணா  போராட்டத்திற்கு, ஐபிஇஏ மாநிலத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன், இந்தியன் வங்கி ஊழியர் கூட் டமைப்பின் மாவட்டச் செயலாளர் மகேஸ்வரன் ஆகியோர் கோரிக்கை உரையாற்றினர். ஐபிஇபி அகில இந்திய பொதுச் செயலாளர் ஹரிராவ் சிறப்புறையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெகநாதன் வாழ்த்தி  பேசினார். இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி  ஊழியர்கள் கலந்து கொண்டனர்.