districts

img

ஈரோட்டில் சுதந்திர தின பவள விழா கருத்தரங்கம்

ஈரோடு, அக்.1- ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சுதந்திரம்-75 பவள விழா கருத்தரங்கம் ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. மத்திய, மாநில அரசு ஊழியர், ஆசிரியர், பொதுத்துறை ஊழியர் சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் நடைபெற்ற கருத்த ரங்கிற்கு ஓய்வூதியர் ஒருங்கிணைப்புக்குவின் செயலாளர் என்.ராமசாமி தலைமை வகித்தார். தொழிற்சங்க கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி.பரமசிவம் வரவேற்றார். இதில் கலந்து கொண்ட எழுத்தாளர் சு.பொ.அகத்திய லிங்கம் விடுதலைப்போரில் ‘உழைக்கும் வர்க்கமும்,  நடுத்தர வர்க்கமும்’ என்ற தலைப்பில் கருத்துரையாற்றி னார்.  தேச பாதுகாப்பில் ஓய்வூதியர் கடமைகள் என்ற தலைப் பில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர் சங்க மாநில துணை  தலைவர் ஆர்.சேதுராமன் சிறப்புரையாற்றினார். ஒன்றிய, மாநில மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர். இறுதி யாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.விஜயமனோகரன் நன்றி கூறினார்.