திருப்பூர், ஜூலை 20 - திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிக ளில் அரசாணைப்படி வழங்க வேண்டிய ஊதி யத்தை வழங்காவிட்டால் ஜூலை 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கேயம், வெள்ளகோ வில், திருமுருகன்பூண்டி ஆகிய ஆறு நகராட் சிகளில் தூய்மைப் பணியை அயல் பணி (அவுட்சோர் சிங்) என தனியாருக்கு ஒப்ப டைத்ததற்கு பிறகு தினக்கூலி ஒப்பந்த தொழி லாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் ரூபாய் 380 மட்டுமே வழங்கப்படுகிறது. தமிழக அரசு வெளியிட்டுள்ள குறைந்த பட்ச ஊதிய அரசாணை 2 (டி) 36 இன்படி மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த அடிப்படை யில் தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.572, குடிநீர் பணியாளர்களுக்கு ரூ.648, ஓட்டுநர்க ளுக்கு ரூ.687 வீதம் தினசரி ஊதியம் வழங்க வேண்டும் என சிஐடியு ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இந்த அரசாணைப்படி ஊதியம் வழங்க கோரி திருமுருகன் பூண்டி, பல்லடம் நகராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் வியாழனன்று காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பூர் பிஷப் பள்ளி அருகே 60 அடி ரோட்டில் உள்ள நக ராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குநர் அலுவ லகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அயல் பணி என தனியாரிடம் ஒப்படைக்கப்பட் டதற்கு பிறகு ஊதியக் குறைப்பு செய்யப் படுகிறது. ஊதியம் மற்றும் இஎஸ்ஐ, பிஎப் பற்றிய விபரங்களை தெளிவாக சொல்ல ஒப் பந்ததாரர்கள் மறுக்கின்றனர். கடந்த ஒரு மாத காலத்தில் பல கட்ட போராட்டம் நடத்தியும் இப் பிரச்சனையில் தீர்வு காணப்படாமல் உள் ளது. எனவே அரசாணைப்படி உரிய ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. திருப்பூர் நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குநர் இளங்கோவனிடம், சிஐடியு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு முருகன்பூண்டி நகர்மன்றக் குழு தலைவர் சுப் பிரமணியம் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். பல்லடம் மற்றும் திருமுருகன்பூண்டி நக ராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், சிஐ டியு ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் சிவ ராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அயல் பணி ஒப்பந்ததாரர்கள், அரசாணைப் படி ஊதியம் வழங்குவதை நிர்வாகம் உத்தர வாதம் செய்ய வேண்டும் என்று வலியுறுத் தினர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல நகராட் சிகளில் ஆணையர்கள் இடம் மாறுதல் செய் யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நகராட்சிகளில் புதிய ஆணையர்கள் ஓரிரு தினங்களில் பொறுப்பேற்பார்கள். அப் போது இப்பிரச்சனை பற்றி பேசி தீர்வு காண லாம் என்று மண்டல இயக்குநர் இளங் கோவன் தெரிவித்தார். எனினும் ஊதியக் குறைப்பு பிரச்சனை யில் நியாயமான ஊதியம் வழங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஐடியு சங்கத்தினர் உறுதிப்பட வலியுறுத்தினர். அடுத்த இரண்டு நாட்களுக்குள் இப் பிரச்ச னையில் நியாயமான தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் நகராட்சிகளில் தூய்மை பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள், குடிநீர் பணியாளர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணி யாளர்கள் உள்ளிட்டோர் ஜூலை 25ஆம் தேதி முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத் தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட் டுள்ளது என்று சிஐடியு ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் கே.ரங்கராஜ் கூறினார். மண்டல இயக்குநரிடம் பேசிய விபரங் களை காத்திருப்பு போராட்டம் நடத்திய தொழிலாளர்களிடம் சங்க நிர்வாகிகள் தெரி வித்தனர். இதை அடுத்து அனைவரும் அங்கி ருந்து கலைந்து சென்றனர்.