பள்ளிபாளையம், மார்ச் 11- போதைப் பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மோகனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு சனியன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். மோகனூரில் உள்ள பள்ளி கல்லூரி பகுதிகளில் பெண் குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல்கள் அதிகரித்து வரு கிறது. 24 மணி நேரமும் தங்கு தடை இல்லாமல் மது விற்பனை நடைபெறுகிறது. மேலும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட் கள் மாணவர்களுக்கு தடையின்றி கிடைக்கிறது. மேலும், சமூக விரோதிகளின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. போதையில் இரு சக்கர வாகனங்களை தாறுமாறாக ஓட்டு வதும், பெண் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடு படுவது என தொடர்ச்சியாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனை தடுக்க இயலாமல் போலீசார் திணறி வருகின்றனர். பள்ளி, கல்லூரி வளாகங்கள் முன்பாகவும், பேருந்து நிறுத்தங் களிலும் தொடர் ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட வேண்டு மென்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் நாமக்கல் மாவட்ட பொருளாளர் எஸ்கே.சிவச்சந்திரன் தலைமை ஏற்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் மு.து.செல்வராஜ் ஆர்ப்பாட் டத்தை துவக்கி வைத்தார். இதில், இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் ஏ.டி.கண்ணன், வாலிபர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், பிரபு, ஜெயராமன் உள்ளிட்ட திரளனோர் கலந்து கொண்டனர்.