பொள்ளாச்சி, பிப்.16- யானைகள் நடமாட்டம் அதிக மாக உள்ளதால், டாப்சிலிப், நவ மலை பகுதிகளுக்கு பிரச்சாரத் திற்கு செல்லும் வேட்பாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்த னர். கோவை மாவட்டம், ஆனை மலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதிகளில் தற்போது மழை இல்லாததால் வறட்சி நிலவுகிறது. இதனால் நீரோ டைகள் வறண்டு காணப்படுகின் றன. இதன் காரணமாக யானை உள் ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் தேடி சுற்றி திரிந்து வருகின்றன. இதற்கிடையில் நகர்ப்புற உள் ளாட்சி தேர்தலையொட்டி வேட்பா ளர்கள் பொள்ளாச்சி வனச்சரகத் தில் உள்ள நவமலை, உலாந்தி வனச்சரகத்தில் உள்ள வனக் கிரா மங்களுக்கு பிரச்சாரத்திற்கு சென்று வருகின்றனர். யானைகள் நடமாட் டம் உள்ளதால் பாதுகாப்பு கருதி வேட்பாளர்களுக்கு சில கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து வனத்துறை அதி காரிகள் கூறுகையில், மழை இல்லா ததால் தண்ணீர் இருக்கும் இடங் களை தேடி வனவிலங்குகள் சென்று வருகின்றன. இதன் காரணமாக டாப்சிலிப் - சேத்துமடை சாலை மற் றும் நவமலை பகுதியில் மாலை நேரங்களில் யானைகள் நடமாட் டம் அதிகமாக உள்ளது. எனவே, மாலை 5 மணிக்கு பிறகு வேட்பா ளர்கள் பிரச்சாரத்திற்கு செல்லக் கூடாது. மேலும், பகல் நேரங்களில் வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு சென் றாலும், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கூட்டமாக வாகனங் களில் பிரச்சாரத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும். வனப்பகுதி களில் ஒலிபெருக்கி பயன்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது. யானைகளை பார்த்தால் தொந்த ரவு செய்ய கூடாது, என்றனர்.