உடுமலை, மார்ச் 18- அதிவேகமாக கிராவல் மண் ஏற்றி சென்று விபத்து ஏற்படுத்தும் டிப்பர் லாரிகளின் உரி மங்களை ரத்து செய்ய வேண்டும், என சிஐ டியு ஆட்டோ சங்கத்தினர் கோரிக்கை வைத் துள்ளனர். போக்குவரத்து விதிகளை காரணம் காட்டி உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதி களில் உள்ள அப்பாவி மக்களின் மீது காவல் துறை மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் அபராதம் என்ற பெயரில் கட்டணம் வசூல் செய்கின்றனர். ஆனால் கடந்த ஆறு மாதங்க ளாக விதிகளை சிறிதும் மதிக்காமல் கனரக வாகனங்களின் ஓட்டுநர்கள் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் முக்கிய வீதிகளின் வழியாக அதிவேகமாக செல்கின்றனர். கிரா வல் மண் ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகளை ஓட்டி வருவோர் அதிவேகமாகச் செல்வதால் பல விபத்துகள் நடந்து உயிர் இழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இவற்றை ஆய்வு செய்ய வேண்டிய போக்குவரத்து ஆய்வாளர், காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதி காரிகள் இதுவரை இந்த வாகனங்கள் மீதோ, அதன் உரிமையாளர்கள் மீதோ என்ன நடவ டிக்கை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. இந்நிலையில், வெள்ளியன்று உடுமலை தாராபுரம் சாலையில் கிராவல் ஏற்ற சென்ற டிப்பர் லாரியின் டயர் வெடித்தது. அதிலி ருந்த கற்கள் அருகில் சென்று கொண்டி ருந்த ஆட்டோவின் மீது விழுந்ததில் ஓட்டுந ரின் தலையிலும், காலிலும் பலமான காயம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற பல விபத்து களை ஏற்படுத்தும் வாகனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை சிஐடியு ஆட்டோ சங்கத்தின் கோரிக்கை வைத்துள்ளனர்.