districts

புதுச்சேரியில் வேலை நேரம் 12 மணி நேரமாக அதிகரிப்பு

சிஐடியு கண்டனம் - இன்று போராட்டம்

புதுச்சேரி, மே 13 - புதுச்சேரியில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி இருப்பதற்கு சிஐ டியு கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு தொழிலாளர்களின் உரி மைகளை பறித்து வருகிறது. பெருமுத லாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தி வருவதை எதிர்த்து  சிஐடியு அன்மையில் தேசம் தழுவிய போராட்டத்தை நடத்தியது. இந்நிலையில் புதுச்சேரி தொழிலாளர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தொழிற்சாலைகளில் உற்  பத்தியை பெருக்கும் வகையில் 3 மாத காலத்திற்கு தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேர மாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறப் பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறையின் இந்த உத்தரவிற்கு சிஐடியு புதுச்சேரி பிரதேச செய லாளர் ஜி.சீனுவாசன் கடும் கண்டனம் தெரி வித்துள்ளார். அரசு நடத்திய துப்பாக்கிசூட்டில் 12 தொழி லாளர்களின் இன்னுயிரை ஈந்து ஆசியாவி லேயே முதன்முதலாக பாண்டிச்சேரி யில்தான் 8 மணி நேர வேலை உரிமை பெறப்  பட்டது. அத்தகைய புதுச்சேரி மாநிலத்தில் தொழிலாளர் விரோத நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் ஈடுபடுவது கண்ட னத்திற்குறியது என்று கூறியுள்ளார். வேலைநேரத்தை அதிகரிக்கும் உத்த ரவை திரும்ப பெற வலியுறுத்தி வியாழனன்று (மே 14) காலை முதலியார்பேட்டையில் உள்ள சிஐடியு அலுவலகம் முன்பு கோரிக்கை பதாகையுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். ஆளுங் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிநாராயணனும், தொழிலா ளர் நலத்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.