மே.பாளையம், ஏப்.13- மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இரண்டு மாதங்களுக்கு பின் தண்ணீர் வரத்து அதிகரித்த தால், பொதுமக்கள் மற்றும் விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையத்தில் ஜீவ நதியாக இருந்த வரும் பவானி ஆறு, போதிய மழை யின்மை மற்றும் இவ்வாண்டு முன் கூட்டியே துவங்கிய கடும் வெயில் காரணமாக ஏறத்தாழ வறண்டே விட்டது. ஆற்று பகுதியில் தண்ணீர் வற்றி எங்கு பார்த்தாலும் வெறும் கூழாங்கற்கள் மட்டுமே காணப்பட் டது. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து பவானி சாகர் வரை ஆற் றின் கரையில் பொதுமக்களுக்கு குடி தண்ணீர் எடுக்கும் 15 க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் தண்ணீர் இன்றி முடங்கியது. இதனால் மக்களுக்கு குடி தண்ணீர் விநியோகம் தடை பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக் கப்பட்டனர். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக பவானி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலை பகுதியில், பெய்த மழை காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு பின்பு மீண்டும் பவானி ஆற்றில் தண்ணீர் வரத் துவங்கியுள்ளது. வெறும் கற்களாக காணப்பட்ட ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் ஓடியது.. வெள்ளியன்று காலை முதல் பவானி ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் வருவதை பார்த்து இப்ப குதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள் ளனர். கோடை மழை நீடிக்கும் பட்சத் தில் பவானி ஆறு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.