கோவை, நவ.6– கோவை மீன் சந்தையில் வரத்து அதிக ரிப்பால், மீன்கள் விலை ஞாயிறன்று குறைந்தே காணப்பட்டது. தடைக்காலம் முழுமையாக முடிந்துள்ளதால், மீன் வரத்து அதிகரித்துள்ளதாகவும், வருகிற சில நாட் களுக்கு மீன்களின் விலை குறைந்தே காணப் படும் என மீன் வியாபாரிகள் தெரிவித்தனர். கோவை உக்கடம் மீன் சந்தையில் மீன் களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இத னால் கேரள மத்தி மீன் கிலோ ரூ 50க்கு விற்ப னையானது. மேலும், கடல் மீன்கள் விலை யும் குறைந்தே காணப்பட்டது. இதேபோல நெய் மீன் கிலோ ரூ120க்கும் விற்பனையா னது. மேலும், ஃபிரஷ் கடல் மீன் வகை களில், கிழங்கா ரூ130, அயிலை ரூ.140, ஏட்டை ரூ.150, கலவா, மடவை, வாலை மீன்கள், குச்சி முரல் ஆகிய மீன்கள் கிலோ ரூ. 200க்கும், கட்டா பாறை, கெல்லல், மஞ்ச கிளி ஆகிய வைகள் ரூ. 250க்கும், சங்கரா, மடவை, செம் பள்ளி ஆகிய மீன்கள் ரூ300க்கும், கடல் ஏட்டை ரூ 300 முதல் ரூ 600 வரையிலும், கலிங்கா முரல், சில்வர் பெட்டி, வெள்ளை கொடுவா, கிளாத்தி, நெத்திலி ஆகிய மீன் கள் ரூ.300க்கும், கிளி மீன் ரூ.300 முதல் ரூ.600 வரையிலும், கரி மீன் ரூ.400, வெள்ளை கிழங்கா ரூ.500, இறால் ரூ.450 முதல் ரூ.700 வரையிலும், நண்டு வகைகள் ரூ.250லிருந்து ரூ.600 வரையிலும் விற்பனை செய்யப் பட்டது. மேலும், விலா மீன் வகைகள் ரூ.300 முதல் ரூ.500 வரையிலும் ,கடல் விரால் ரூ.550, பாறை ரூ.300, கருப்பு வாவல் ரூ.750, சால மன் ரூ.500, வஞ்சரம் ரூ.450 முதல் ரூ.900 வரை யிலும் விற்பனை செய்யப்பட்டது. ஞாயி றன்று கோவை உக்கடம் மீன் சந்தையில் ஏராளமானோர் குவிந்தனர்.