சேலம், அக்.5- வெள்ளி விலை சரிந்துள்ளதால், சேலம் வெள்ளிக்கொலுசு களுக்கு ஆர்டர்கள் குவிந்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். சேலம் வெள்ளிக்கொலுசு கலைநயங்களுடன் தயாரிக் கப்படுவதால் அதற்கென தனி சிறப்பு உண்டு. எனவே, சேலத் தில் தயாரிக்கப்படும் கொலுசுகள் ஆந்திரா, கர்நாடகா, மகா ராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம் உட்பட நாட்டின் பல் வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக வெள்ளி நகை தொழில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இதனால் வெள்ளி தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான பட்டறைகளும், அதனை நம்பி ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலா ளர்களும் உள்ளனர். குறிப்பாக சேலம் செவ்வாய்ப்பேட்டை, சிவதாபுரம், பனங்காடு, ஆண்டிப்பட்டி, நங்கவள்ளி, ஜலகண் டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் கொலுசு பட்டறை கள் உள்ளன. இதன் மூலம் அதிகளவில் சேலத்தில் கொலுசு, தண்டை, அரைஞான் கொடி உள்ளிட்ட வெள்ளி நகைகள் உற் பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில், நவ.12 ஆம் தேதியன்று தீபாவளி பண் டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் தற்போதே வெள் ளிக்கொலுசு உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளது. அதேசமயம் கடந்த வாரம் 74 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு கிலோ வெள்ளி தற்போது 69 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது. ஒரே வாரத்தில் கிலோவுக்கு 5 ஆயிரம் சரிந்துள்ளதால் வெள்ளிக் கொலுசு உட்பட நகைகளின் விலையும் கணிசமாக குறைந் துள்ளது. இதனால் தற்போது வெள்ளி நகைகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், வட மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் வெள்ளிக்கொலுசுக்கு ஆர்டர்கள் குவிந்துள்ளன. இதனால் வெள்ளி தொழில் சுறு சுறுப்பு அடைந்துள்ளது.