தீபாவளி பண்டிகையொட்டி தங்க நகை விற்பனை அதிகரித்துள்ளதாக தங்கநகை வியாபரிகள் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் தங்க நகைகடைகளின் விற்பனை ஏறக்குறைய இரு மடங்கு அதிகமாகி விட்டது. ஏழை எளிய மக்கள் சிறிய அளவு நகைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். போட்டு அழகு பார்ப்பதற்கு என்பதைவிட கையில் இருக்கிற கொஞ்ச நஞ்ச பணத்தை நகை வாங்குவதன் மூலம் அது சேமிப்பாக இருக்கும் என்கிற நிலையில் இருந்து தங்கத்தை ஆர்வத்தோடு வாங்குகின்றனர். கம்மல், ஜிமிக்கி, மோதிரம், செயின் விற்பனை அதிகமாக நடக்கிறது. புரட்டாசி முடிந்து ஐப்பசி துவங்கியுள்ளதால் தீபாவளி முடிந்த பின்னரும் முகூர்த்த காலங்கள் இருப்பதால் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.