பட்டு வேட்டிகள் உற்பத்தி அதிகரிப்பு
சேலம், டிச.15- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலத்தில் பட்டு வேட்டிகள் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், ஈரோடு, திருப்பூர், கரூர், காங்கேயம், வெள்ளக்கோவில், மதுரை, விருதுநகர் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் பட்டு வேட்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், சேலத்தில்தான் பட்டு வேட்டிகள், அங்கவஸ்திரம், சர்ட் பீஸ்கள் உள்ளிட்டவை அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டு வேட்டிகள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், தென்னிந் தியர்கள் அதிகம் வாழும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, துபாய், சார்ஜா, அபுதாபி, குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் ஆகஸ்ட் - செப்டம்பரில் பட்டு நூல் விலை கணிசமாக உயர்ந்தது. இந்த விலை உயர்வு காரணமாக பட்டு வேட்டிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டன. இந்த விலை உயர்வு ஒரு புறம் இருந்தாலும், கடந்த சில மாதங்களுக்கு முன் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டு வேட்டிகள் உற்பத்தி யை உற்பத்தியாளர்கள் அதிகப்படுத்தினர். தீபாவளிக்கு பின்னர் உற்பத்தி சரிந்துள்ளது. இந்நிலையில், அடுத்தாண்டு ஜன.14 ஆம் தேதியன்று தமிழர்களின் பண்பாட்டு பாரம்பரிய பொங்கல் விழா வரு கிறது. இதையொட்டி பட்டு வேட்டிகள் உற்பத்தி அதிகரித் துள்ளது. இதுகுறித்து சேலத்தைச் சேர்ந்த வேட்டி உற்பத்தி யாளர்கள் கூறுகையில், அம்மாப்பேட்டை, பொன்னம்மாப் பேட்டை, சிங்கமெத்தை, சித்தேஸ்வரா, வீராணம், வலசை யூர், தாதகாப்பட்டி, சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பட்டு வேட்டிகள் கைத்தறி மற்றும் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி, தேவை அதிகரித்துள்ளதால் வேட்டிகள் உற்பத்தியாளர்கள் அதிகரித் துள்ளனர். இதனால், வழக்கமான உற்பத்தியில் இருந்து 30 முதல் 40 சதவிகிதம் வரை உற்பத்தி அதிகரித்துள்ளது. இதற்கிடையே வழக்கமாக கிடைக்கும் ஆர்டர்கள் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும். பொங்கல் முடிந்து தை, மாசி மாதங்களில் அடுத்தடுத்து முகூர்த்த தினங்கள் வரும். இதனால் திருமண சீசன் சமயத்தில் பட்டு வேட்டிகள் தேவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது, என்றனர்.
வாகனங்கள் ஏலம்
சேலம், டிச.15- சேலம் மாநகரத்தில் குற்ற வழக்குகளில் பறி முதல் செய்யப்பட்ட 495 வாக னங்கள் மொத்தம் ரூ.35 லட்சத்து 27 ஆயிரத்திற்கு ஏலம் போனது. சேலம் மாநகர காவல் துறையினரால் குற்ற வழக்குகளின் போது பேருந்து - 1, லாரி - 2, கார் - 2, ஆட்டோ - 6, இரு சக்கர வாகனங்கள் - 484 என மொத்தம் 495 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டன. இதில், சேலம் மாநகர தலைமையிட காவல் துணை ஆணையாளர் ராதா கிருஷ்ணன்,ஆயுதப்படை கூடுதல் காவல் ஆணை யாளர் ரவிச்சந்திரன், சேலம் தெற்கு வட்டார வருவாய் ஆய்வாளர் சரவணன், சேலம் தெற்கு மோட்டார் வாகன ஆய்வாளர் ராம ரத்தினம் மற்றும் சேலம் மாவட்ட அரசு தானியங்கி செயற்பொறியாளர் தேவப் பிரியா ஆகியோர் பங்கேற் றனர்.
குறைந்த விலைக்கு நகைகள் தருவதாக கூறி மோசடி
தனியார் நிறுவனம் மீது புகார்
கோவை, டிச.15- குறைந்த விலைக்கு நகைகள் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கோவையில் செயல்படும் தனியார் நிறுவனம் மீது திருப்பூரைச் சேர்ந்தவர் புகாரளித்தார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் மசூதி வீதியைச் சேர்ந்தவர் சல்மான் கான் (23). இவர் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது, கோவையில் தனியார் டிரேடிங் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் குறைந்த விலைக்கு நகைகள் தருவதாக கூறி விளம்பரம் செய்தனர். இந்த விளம்பரத்தை பார்த்த நான், எனது நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்தோம். ஆனால், அவர்கள் கூறியபடி பணத்தை பெற்றுக் கொண்டபின், குறைந்த விலைக்கு நகைகள் தரவில்லை. முதலீட்டு தொகையையும் திருப்பிக் கொடுக்க மறுத்துவிட்டனர். பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட போதும் உரிய பதில் அளிக்கவில்லை. தற்போது சில தினங்களுக்கு முன்பு செல்போனில் அழைத்து பேசிய போது அந்த மோசடி நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர், “நான் தற்போது என்ஐஏ விசாரணையில் உள்ளேன். நீங்கள் அடிக்கடி எனக்கு போன் செய்தால், உங்களை என்ஐஏ அதிகாரிகள் விசாரிப்பார்கள்” என மிரட்டல் விடுத்தார். எனவே, லட்சக்கணக்கில் மோசடி செய்த நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
மதிப்பெண் சான்றிதழ் பெற அழைப்பு
ஈரோடு, டிச.15- ஈரோடு மாவட்டத்தில் மேல்நிலைப் பொதுத்தேர்வு மற்றும் துணைத்தேர்வுகளுக் கான மதிப்பெண் சான்றிதழ்கள் பெறாதவர் களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. மார்ச் 2019 முதல் செப்டம்பர் 2020 வரை யிலான பருவங்களுக்குரிய மேல்நிலைப் பொதுத்தேர்வு மற்றும் துணைத்தேர்வுகளுக் கான மதிப்பெண் சான்றிதழ்கள் தேர்வு மையங்களில் வழங்கப்பட்டது. அப்போது சான்றிதழ் பெறாத தனித்தேர்வர்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் ஈரோடு உதவி இயக்குநர் அலுவலகத்தில் வைக்கப் பட்டுள்ளன. எனவே, மதிப்பெண் சான்றிதழ்களை இதுவரை பெறாத தனித்தேர்வர்கள் 90 நாட்களுக்குள் உதவி இயக்குநர், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலக வளாகம், (பழைய ரயில் நிலையம் சாலை) ஈரோடு – 638001 என்ற முகவரியில் அணுகி பெற்றுக் கொள்ளலாம். தவறினால் தேர்வுத் துறை விதிமுறைகளின்படி விநியோகிக்கப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்படும். எனவே, தனித்தேர்வர்கள் இவ்விறுதி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக தர வரிசையில் இடம்பெற்ற அவிநாசி அரசு கல்லூரி மாணவர்கள்
அவிநாசி, டிச.15- அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் கள் பல்கலைக்கழக தர வரிசையில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். பாரதியார் பல்கலைக்கழகத்தின் 2021- 22 காண தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் அரசு கல்லூரி மாணவர் கள் சர்வதேச வணிகவியல் துறையில் உள்ள 7இடங்களில் 4 இடங்களையும், வணிக நிர்வாகவியல் பிரிவில் 2 இடங்களை யும் பெற்று சாதனை படைத்துள்ளனர். சர்வதேச வணிகவி யல் துறையைச் சேர்ந்த ஜீவிதா 2ஆம் இடம், ரச்சனா 4 ஆம் இடம், ஜெனரஞ்சனி 5 ஆம் இடம், கிருஷ்ணவேணி 7 ஆம் இடமும் பெற்றனர். வணிக நிர்வாகவியல் துறையில் பிரின்ஸ் ராணி முதலிடமும், கருப்புசாமி 2ஆம் இடமும் பெற்று சாதனை படைத்தனர். இவர்களுக்கு கல்லூரி முதல்வர் ஜோ.நளதம், துறைத் தலைவர்கள் செ.பாலமுருகன், செல்வ தரங்கினி உள் ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
ஊர்காவல் படை பணியிடங்களுக்கு டிச.19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
திருப்பூர், டிச.15- திருப்பூர் மாவட்ட ஊர்காவல் படையில் காலியாக உள்ள துணை மண்டல தளபதி மற்றும் ஆளினர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் டிச.19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக் கலாம். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவ லகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது, திருப்பூர் மாவட்ட ஊர்காவல் படையில் துணை மண்டல தளபதி மற்றும் ஆளினர் பதவிகளுக்கு பணி நியமனம் செய் யப்படவுள்ளனர். இதில், காவல் துறைக்கு உதவியாக ஊர்கா வல் படையில் தன்னார்வமாக கோவில் மற்றும் இதர பாதுகாப் புப் பணியில் தங்களுடைய ஓய்வு நேரத்தில் சேவை செய்ய விரும்பும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 50 வய துக்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்று பாலி னத்தவர் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங் களை அவிநாசி, பல்லடம், தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் உள்ள ஊா்காவல் படை அலுவலகங்க ளில் இலவசமாக டிச.17 ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ள லாம். பின்னர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மாற்றுச் சான் றிதழ், மதிப்பெண் பட்டியல், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல்களுடன் மாவட்ட ஊர்காவல் படை அலுவல கத்துக்கோ அல்லது சம்பந்தப்பட்ட உட்கோட்ட ஊர்காவல் படை அலுவலகத்துக்கோ டிச.19 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் உடல் தகுதித் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தகுதியுள்ளோர் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் பணிக்கு அரசுப் பணியா ளர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிவோரும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
ஜனவரி 6ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம்
திருப்பூர், டிச.15- மடத்துக்குளத்தில் குவாரிகள் அமைக்க ஜனவரி 6ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து பல்லடத்தில் உள்ள திருப்பூர் மாவட்ட (தெற்கு) மாசுக் கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறை செயற்பொறியாளர் சுவாமிநாதன் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், மைவாடி கிரா மம் க.ச.எண் 688, 689, 657 ஆகிய இடங்களில் சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குழுமம் சார்பில் 10.98 ஹெக்டேர் பரப்பளவில் கற்கள் மற்றும் கிராவல் குவாரிகள் அமைக்க மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமை யில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஜனவரி 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள் ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.46.12 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அவிநாசி, டிச.15- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற் பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.46.12 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 1821 பருத்தி மூட்டை கள் கொண்டு வரப்பட்டன. இதில், ஆர்.சி.எச்.ரகப்பருத்தி குவிண்டால் ரூ. 7,000 முதல் ரூ.8,577 வரையிலும், மட்டரக (கொட்டு ரக)ப்பருத்தி குவிண்டால் ரூ.2,000 முதல் ரூ.3,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.46.12 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.
இன்று மின்தடை
உடுமலை, டிச. 15- மடத்துக்குளம் துணை மின்நிலையத்தில் வெள்ளிக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று மின் வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரி வித்துள்ளார். மின்தடை ஏற்படும் பகுதிகள் மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், பாப்பான் குளம், சோழமாதேவி, வேடபட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமரைப்பாடி, சீலநாயக் கன்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூர், மற் றும் கருப்புசாமி புதூர், ரெட்டியாபாளையம், போத்தநா யக்கனூர், மடத்தூர், மயிலாபுரம், நல்லண்ணகவுண்டன் புதூர்,குளத்துப்பாளையம் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துவுள்ளார்.
தாராபுரத்தில் நாளை மின்தடை
தாராபுரம், டிச. 15- தாராபுரத்தில் நாளை பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. தமிழ் நாடு மின்சார வாரியம், பல்லடம் மின் பகிர்மான வட்டம், தாரா புரம் கோட்டம், தாராபுரம் 110-22 கேவி துணை மின் நிலையத் தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக சனிக்கிழமை 17 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாராபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகள், வீராட்சிமங்கலம், நஞ்சியம் பாளையம், வரப்பாளையம், மடத்துப்பாளையம், வண்ணா பட்டி, உப்பாறு டேம், பஞ்சப்பட்டி, சின்னப்புத்தூர், கோவிந் தாபுரம், செட்டிபாளையம் மற்றும் இது சார்ந்த பகுதிகளில் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.
அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:46.61/60அடி நீர்வரத்து:751கன அடி
வெளியேற்றம்:519கனஅடிமழையளவு:2மிமீ
அமராவதி அணை நீர்மட்டம்: 89.18/90அடி.நீர்வரத்து:1250கனஅடி
வெளியேற்றம்:1313கனஅடிமழையளவு:1மிமீ
பூ விலை உயர்வு
திருப்பூர், டிச. 15 - கடும் பனிப்பொழிவு கார ணமாக பூ விளைச்சல் குறைந்துள்ளது. இதன் கார ணமாக திருப்பூர் பூ மார்க் கெட்டில் வரத்து குறைந் தது. வியாழனன்று மல்லி கைப்பூ கிலோ ரூ.1400 க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.600க் கும் விற்பனை செய்யப்பட் டது.
சாதியற்றோர் சங்கமம்: 500 பேர் பங்கேற்க முடிவு
அவிநாசி, டிச.15- சென்னையில் நடக்கும் சாதியற்றோர் சங் கமம் நிகழ்வில் 500 க்கும் மேற்பட்டோர் பங் கேற்க தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மேற்கு மண்டல தலைவர் செயலாளர்கள் கூட் டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மேற்கு மண்டல மாவட்டச் செயலாளர் கள் கூட்டம், வியாழனன்று அவிநாசியில், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் யு.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் பி.பி.பழனிச்சாமி அகில இந்திய மாநாடு (டிஎஸ்எம்எம்) குறித்து விளக்கிப் பேசினார். இதைத்தொடர்ந்து ஜன வரி 4, 5 ஆம் தேதிகளில் சென்னையில் தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு நடைபெறுகிறது. ஜன. 4 ஆம் தேதி நடை பெறும் “சாதியற்றோர் சங்கமம்” நிகழ்வில் மேற்கு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்டவர்களைத் திரட்டி பங்கேற்பது என்றும், மாநாட்டின் செய்திகளை விரிவான முறையில் கிராமங்கள் தோறும் கொண்டு செல்வது என்றும் முடிவு செய்யப்பட் டது. இந்த கூட்டத்தில் மாநில உதவி செயலா ளர் ச.நந்தகோபால் உள்ளிட்ட மாவட்டத் தலைவர்களும், மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவில் பங்கேற்ற அனைவருக்கும், திருப்பூர் மாவட் டச் செயலாளர் சி.கே.கனகராஜ் நன்றி கூறி னார்.
திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
திருப்பூர், டிச. 15 - திருப்பூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு சிறப்பு செயலர் /மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம்.கரு ணாகரன் ஆய்வு மேற்கொண்டார். வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் முன்னிலையில் காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.9.88 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். அத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனைத்துத் துறைகளில் நடை பெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் பங்கேற்ற அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன் னோடி வங்கியின் சார்பில் நடைபெற்ற கடன் வழங்கும் முகாமில் 73 நபர்களுக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் கல்வி, தொழில், தாட்கோ மற் றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் கடன் உதவிக்கான உத்தரவு ஆணைகளை யும் அவர் வழங்கினார். இதில் அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
தாராபுரத்தில் கொசு உற்பத்தியை தடுக்க புதிய கொசு மருந்து தெளிப்பான்
தாராபுரம், டிச.15 - தாராபுரம் நகராட்சி பகுதியில் உற்பத்தியாகும் கொசுக் களை ஒழிக்க புதிய கொசு மருந்து தெளிப்பான் இயந்திரங் களை நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன் வழங்கினார். தாராபுரம் நகராட்சி பகுதியில் 30 வார்டுகள் உள்ளன. இதில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரு கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் பெய்த தொடர் மழை யால் நகரில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு டெங்கு, மலே ரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு நகராட்சி முழுவதும் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற் காக புதிய இயந்திரங்கள் நகராட்சி நிர்வாகம் சார்பில் வாங் கப்பட்டு இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து கொசு ஒழிப்பு புதிய இயந்திரங்களை நகராட்சி பணியாளர்களி டம் நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் வழங்கினார். அப் போது நகராட்சி ஆணையாளர் ராமர், நகராட்சி சுகாதார ஆய் வாளர் செல்வகுமார், நகராட்சி கவுன்சிலர்கள் ஹைடெக் அன் பழகன், தேவி அபிராமி கார்த்திக் ஆகியோர் உடன் இருந் தனர்.
பருவமழை: சேலத்தில் 55 ஏரிகள் நிரம்பின
சேலம், டிச.15- சேலம் மாவட்டத்தில் பெய்த பருவமழையால் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டிலிருந்த 55 ஏரிகள் முழுமையாக நிரம் பின. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் 88 ஏரிகள் உள்ளன. தென்மேற்கு பருவமழை காலம் நிலவிய கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 88 ஏரிகளில் கன்னங்குறிச்சி மூக்க னேரி, பைரோஜி ஏரி, கமலாபுரம் பெரிய ஏரி, கமலாபுரம் சின்ன ஏரி,கொண்டலாம்பட்டி ஏரி, ஆத்தூர் புது ஏரி, முட்டல் ஏரி, மணிவிழுந்தான் ஏரி, தேவியாக்குறிச்சி ஏரி, செந்தாரப்பட்டி ஏரி உள்பட 29 ஏரிகள் முழுமையாக நிரம்பின. அபினவம் ஏரி, சின்ன சமுத்திரம் ஏரி உள்பட 8 ஏரிகள் 50 சதவிகிதத்திற்கும் மேல் நிரம்பியிருந்தன. 15 ஏரிகள் வறண்ட நிலையில் இருந் தன. தற்போது வடகிழக்கு பருவமழை காலம் காரணமாக பர வலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாண்டஸ் புயல் கரையை கடந்த பின்னர், சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த 3 நாட்களில் விட்டு விட்டு மழை பெய்தது. இதன் காரணமாக நீர் நிலைகள், கால்வாய்களில் நீரோட்டம் அதிகரித்து உள்ளது. இதையடுத்து 88 ஏரிகளில், 55 ஏரிகள் முழுமை யாக நிரம்பி அவற்றிலிருந்து உபரிநீர் வெளியேறும் நிலை யில் உள்ளது. 75 முதல் 99 சதவிகிதம் வரை நீர் நிரம்பிய நிலை யில் 4 ஏரிகள் உள்ளன. 50 முதல் 74 சதவிகிதம் அளவுக்கு நீர் நிரம்பிய நிலையில் 8 ஏரிகள் உள்ளன. ஆறு ஏரிகளில் 25 முதல் 49 சதவிகிதம் வரை தண்ணீர் உள்ளது. 25 சதவிகிதத் திற்கும் குறைவாக 4 ஏரிகளில் நீர் இருப்பு உள்ளது. 11 ஏரிகள் இன்னும் வறண்ட நிலையில் தான் காட்சியளிக்கின்றன. வடகிழக்கு பருவமழை காலம் இன்னும் நீடிப்பதால் 50 சத விகிதம் வரை நீர்மட்டம் எட்டியுள்ள ஏரிகள் விரைவில் நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த அளவு நீர் இருப்பு உள்ள ஏரிகளும், வறண்ட நிலையில் உள்ள ஏரிகளும், வடகிழக்கு பருவமழை காலத்திற்குள் நிரம்ப வேண்டும் என் றும், அதற்கான ஆக்கிரமிப்புகளை அகற்றி அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐடி ஊழியர் தற்கொலை
ஈரோடு, டிச.15- ஐடி நிறுவன ஊழியர் தற்கொலை கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு சூரம்பட்டி, குமலன் வீதியை சேர்ந்தவர் செல்வ ராஜ். இவரது மகன் ஆனந்தன் (23). கோவையில் உள்ள ஐடி நிறுவனத்தில் கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டில் இருந்து பணியாற்றி வந்த ஆனந்தன் மன அழுத்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், புதனன்று பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஆன்ந்தன் சீலிங்பேனில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஈரோடு தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தியதில், மன அழுத்தம் காரணமாக ஏற்கனவே ஆனந்தன் 3 முறை தற்கொலைக்கு முயன்றது தெரியவந் தது.
நியாய விலைக்கடையில் காலிப்பணியிடங்கள்
நாமக்கல், டிச.15- நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு துறை யின் கீழ் இயங்கும் நியாய விலைக் கடை களில் 200 காலிப்பணியிடங்களை நிரப்பு வதற்கான நேர்காணல் வியாழக்கிழமை (டிச.15) துவங்கி 13 நாள்கள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 12,000 விண்ணப்பதாரர்க ளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் 900 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இதில், காலியாக உள்ள 181 விற்பனையாளர், 19 கட்டுநர் பணியிடங் களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் 2019 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. 2020, 2021-இல் விண்ணப்பித்தவர் களுக்கான நேர்காணல் பல்வேறு காரணங்க ளால் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு 2022, நவம்பரில் புதியதாக அறிவிப்பு வெளியிடப் பட்டது. இதில் 10, பிளஸ் 2 வகுப்பு முடித்த 12 ஆயிரம் பேர் இணையவழியில் விண்ணப் பித்தனர். அவர்களுக்கான நேர்காணல் டிச.15 முதல் டிச. 29 வரை நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெற உள்ளது. காலை 8.30 முதல் பிற் பகல் 6 மணி வரை நடைபெறும் இந்த நேர் காணலில் தினசரி 800 பேர் வீதம் பங்கேற்க உள்ளனர். விண்ணப்பதாரர்களை நேர் காணல் செய்ய மூன்று அதிகாரிகள் வீதம் 16 குழுக்கள் (48 பேர்) அமைக்கப்பட்டுள்ளன. இதில் தகுதியானோரைத் தேர்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இதனைத்தொ டர்ந்து ஓரிரு நாள்களில் பணியிடங்கள் நிரப் பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்து ஓட்டுநர் மீது நீதிபதி தாக்குதல்?
கோவை, டிச.15- கோவை சுங்கம் அருகே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுநருக்கும், நீதிபதிக்கும் இடையே வாக்குவாதம் - சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட் டுள்ள நிலையில், நீதிபதி அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக அரசு போக்கு வரத்து ஊழியர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சுங்கத்திலிருந்து தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் 5-சி பேருந்து டவுன்ஹால் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து முன்பு கோவை ஒருங்கிணைந்த நீதி மன்றத்தின் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் காரில் சென்று கொண்டி ருந்தார். அப்போது பேருந்து ஓட்டுநர் நீதிபதியின் கார் அருகே லேசாக உரசு வது போல் சென்றுள்ளதாக கூறப்படுகி றது. இதையடுத்து நீதிபதி, பேருந்து முன்பு காரை நிறுத்தி வாகனம் ஓட்டி யது தொடர்பாக கேள்வி எழுப்பி உள் ளார். இது இவர்களுக்குள் வாக்கு வாதமாக முற்றியுள்ளது. இதன்பின் னர், நீதிபதி அரசு பேருந்து ஓட்டுநரை திடீரென அறைந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலனது. இது அரசு போக்குவரத்து ஊழியர்களி டையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர் பாக பந்தய சாலை போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், இருதரப்பிலும் புகார் கொடுக்க வில்லை என்பதால் வழக்கு பதிவு செய் யவில்லை, சமரச பேச்சுவார்த்தை நடத் தப்பட்டு வருவதாக காவல்துறை வட் டாரங்கள் தெரிவிக்கிறது.
3 பேருக்கு ஆயுள் தண்டனை
உதகை, டிச.15- நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள ஓம் நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (43). இவருடைய மனைவி ராசாத்தி. இவர்களுக்கு கவின் என்ற மகனும், காவியா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் மகேந்திரனுக்கும், அதேபகுதி யைச் சேர்ந்த சின்ராஜ் மகன்கள் புவனேஷ்வரன் (28) மற்றும் சதீஷ் (24) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், மகேந்திரன் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதியன்று எஸ்.கைகாட்டி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு புவனேஷ்வரன், சதீஷ் மற்றும் இவர்க ளது நண்பரான பிரட்லீ என்ற நாகராஜ் (30) ஆகியோர் நின்றிருந்தனர். அப்போது இவர்களுக்கும், மகேந்திரனுக் கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது சதீஷ் மற்றும் புவனேஸ்வரனின் தாய் குறித்து மகேந்திரன் தவறாக பேசியதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த 3 வாலிபர்களும், இரும்பு கம்பியால் மகேந்திரனை தாக்கினர். குறிப்பாக அவரது இனப்பெருக்க உறுப்பில் பலமாக தாக்கியதாக தெரிகிறது. அதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோத்தகிரி காவல் துறையினர் புவனேஷ்வரன், சதீஷ், நாகராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில், கடந்த 5 ஆண்டுகளாக நடை பெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வியாழனன்று கூறப் பட்டது. இதன்படி குற்றம் சாட்டப்பட்ட சகோதரர்களான சதீஷ், புவனேஸ்வரன் மற்றும் நாகராஜ் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட் டது. மேலும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
உணவு திருவிழா
தருமபுரி, டிச.15- தருமபுரி மாவட்டம், காரி மங்கலம் அருகே உள்ள கம்பைநல்லூரில் செயல் பட்டு வரும் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உண வுத் திருவிழா கொண்டா டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளார் வேடி யப்பன், சாந்தி வேடியப்பன், நிர்வாக இயக்குநர்கள் தமிழ் மணி, பவானி தமிழ்மணி, சன் மதி ராஜாராம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், பள்ளி மாணவர்கள் கம்பங் கூழ், கேழ்வரகு கூழ், கம்பு அடை, கேழ்வரகு அடை, முளைகட்டிய பாசிப்பயிறு, நவதானிய இனிப்பு உருண் டைகள், சோள தோசை மேலும் 100க்கும் மேற்பட்ட அறுசுவை உணவு வகைகள் மற்றும் 54 வகையான பழ வகைகள் மாணவர்கள் மற் றும் ஆசிரியர்கள் மூலம் கொண்டு வரப்பட்டு காட்சிப் படுத்தப்பட்டன.