சேலம், செப்.10- பணிச்சுமை காரணமாக அதிகாரி கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வரும் நிலை யில், உடனடியாக காலிப்பணியிடங் களை நிரப்ப வேண்டும் என தமிழ் நாடு வருவாய்த்துறை அலுவலர் சங் கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலு வலர் சங்கத்தின் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மண்டல பயி லரங்கம் சேலம் மாவட்டம், நெய்க் காரப்பட்டி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சங்கத்தின் மாநிலத் தலைவர் முருகையன் செய்தியாளர் களிடம் பேசுகையில், கலைஞர் மக ளிர் உரிமைத்தொகை பணிகள் அதி களவில் உள்ளது. இத்திட்டத்திற்கு சிறப்பு பணியிடங்களை உருவாக்கி அந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும். வருவாய்த்துறை அலுவ லர்கள் மீது காவல் துறை நடவடிக்கை கள் ஏவப்பட்டு, பொய் வழக்கு புனை யப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அலுவலரின் நலன்கருதி, குற்ற வியல் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மேலும், மாநில முதல்வர், அமைச்சர் தலை மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக் கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அரசு அலுவலர்கள் பணிச்சுமை யின் காரணமாக தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாக உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கிராம உதவி யாளர் பணிச்சுமையின் காரணமாக தற்கொலைக்கு செய்து கொண்டுள் ளார். மேலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு போதிய கால அவகாசம் வழங்காமல், பணிகளை வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் செயல்படுத்துவது பணிச்சுமையா கவே உள்ளது. எனவே, அரசுத்துறை யில் காலியாக உள்ள பணியிடங் களை விரைந்து நிறைவேற்ற வேண் டும். இதன்மூலம் பணிச்சுமை குறைந்து, அலுவலர்கள் நலன் காக்கப்படும், என்றார். இந்த செய்தியாளர்கள் சந்திப் பின்போது வருவாய்த்துறை அலுவ லர் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தநாரி, சேலம் மாவட்டப் பொரு ளாளர் முருக பூபதி ஆகியோர் உடனி ருந்தனர்.