உதகை, ஜூன் 5- நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதி யில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந் தது. இதனால் ஏற்பட்ட வறட்சியால் வனப் பகுதியில் காட்டுத்தீ பரவியது. வன விலங்குகள் மட்டுமின்றி பொதுமக்க ளும் வறட்சியால் சிரமம் அடைந்தனர். மேலும் விவசாய பணிகளும் பாதிக்கப் பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தேயிலை, காபி, குறு மிளகு உள்ளிட்ட பயிர்களின் விளைச் சல் பாதித்தது. இதன் காரணமாக தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வரத்து அடியோடு குறைந்தது. இத னால் தேயிலை தூள் உற்பத்தியும் பரவ லாக குறைந்தது. இந்நிலையில், கூடலூர் பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வறட்சி யின் தாக்கம் குறைந்து, வனப்பகுதி பசுமைக்கு திரும்பியுள்ளது. இதே போல் தேயிலை தோட்டங்களிலும் நிலத் தின் ஈரத்தன்மை அதிகரித்துள்ளது. இத னால் பசுந்தேயிலை விளைச்சல் நாளுக் குநாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள் ளது. இதுகுறித்து சிறு விவசாயிகள் கூறு கையில், கோடை காலத்தில் பசுந் தேயிலை விளைச்சல் பாதித்தது. இத னால் தொழிற்சாலைகளில் உற்பத்தி யும் குறைந்தது. வறட்சியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் விளைச்சல் இல் லாத காரணத்தால் வருவாய் குறைந் தது. தற்போது பரவலாக மழை பெய்வ தால் தேயிலை தோட்டங்கள் பசுமை யாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து பசுந் தேயிலை விளைச்சலும் அதிகரித்துள் ளது. இதன் காரணமாக தொழிற்சாலை களுக்கு பச்சை தேயிலை வரத்து அதிக ரித்துள்ளது. ஆனால், செலவினங்க ளுக்கு ஏற்ப பசுந்தேயிலைலுக்கு கட் டுப்படியான விலை நிர்ணயித்தால் வரு வாய் கிடைக்கும். எனவே விவசாயி களுக்கு விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.