திருப்பூர், மார்ச் 19- உடுமலை - மூணாறு சாலையில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதால், வாகன ஓட்டிகள் எச்சரிக் கையாக வாகனம் ஓட்ட வேண்டும் என வனதுறையினர் கூறியுள்ளனர். இதுகுறித்து வன துறை அதிகாரி கள் தெரிவிக்கையில், திருப்பூர் மாவட் டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடு மலை, அமராவதி உள்ளிட்ட வனச்சர கங்களில் யானை, புலி, சிறுத்தை, கட மான், காட்டெருமை, கரடி, கருஞ்சி றுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவி லங்குகள் வசித்து வருகின்றன. அவற் றிற்கு தேவையான உணவு தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளும், தண்ணீர் தேவையை அடர்ந்த வனப்ப குதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளும் பூர்த்தி செய்து தருகின்றன. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண் ணீர் தேவைக்காக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை அதிகம் நம்பி உள் ளது. தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் வனப்ப குதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன. இதனால் வனவிலங்குக ளுக்கான உணவு தண்ணீர் தேவை பூர்த்தி அடைவதில் பற்றாக்குறை ஏற் பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவாரப்ப குதிக்கு வந்துவிட்டன. அமராவதி அணையில் நீர் இருப்பு உள்ளதால் அணைப் பகுதிக்குள் வனவிலங்குகள் முகாமிட்டு வருகின்றன. இதனால் அவற்றுக்கான உணவு தண்ணீர் தேவை தற்காலிகமாக பூர்த்தி அடைந்து உள் ளது. மேலும் யானைகள் காலை நேரத் தில் உடுமலை - மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது. அப்போது ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத் தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந் தரவு கொடுக்கிறார்கள். இதன் காரண மாக யானைகள் மிரண்டு வாகன ஓட்டி களை துரத்திச் சென்ற சம்பவமும் நிகழ்ந்து உள்ளது. இதனால் உடுமலை - மூணாறு சாலையில் யானைகள் நட மாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற் கொள்ள வேண்டும். யானைகள் அங்கி ருந்து செல்லும் வரை ஒலி எழுப்பு வதோ, அவற்றின் மீதுகற்களை வீசு வதோ, செல்பி, புகைப்படம் எடுப்ப தற்கோ முயற்சி செய்யக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அத்துடன் உடுமலை மூணாறு- சாலை மலை அடிவாரப் பகு தியில் வனத்துறையினர் ரோந்து பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.