பூண்டு விலையை குறைக்க நூதன முறையில் வலியுறுத்தல்
பூண்டு விலையை குறைக்க நூதன முறையில் வலியுறுத்தல் சேலம், பிப்.22- சேலத்தில் திருமண விழாவில், மணமக்களுக்கு பூண்டு மாலை, பூண்டு பூங்கொத்து கொடுத்து, உயர்ந்துள்ள பூண்டு விலையை குறைக்க வேண்டும் என திரைப்பட நடிகர் பெஞ்ச மின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் பூண்டு விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பூண்டு 400 முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை எளிய பொதுமக்கள் பூண்டு வாங்கி பயன்படுத்த முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒன்றிய, மாநில அரசுகள் பூண்டு விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வரு கின்றனர். இந்நிலையில், சேலம் அம்மாபேட்டை பகுதியில் திருமண விழா நடைபெற்றது தன்னை திமுகவில் இணைத் துக்கொண்ட பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் கலந்து கொண்டு, மணமக்களுக்கு பூண்டு மாலை மற்றும் பூண்டு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ஒன்றிய அரசு பூண்டு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த முயற்சியை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
பணமோசடி: இளைஞர் கைது
பணமோசடி: இளைஞர் கைது நாமக்கல், பிப்.22- செயலி மூலம் கடன் வாங்கித்தருவதாகக்கூறி, பண மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், செல்லப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் கே.சதீஷ் (34), முதுநிலை பொருளா தாரம் படித்துள்ளார். இவர் “கேஷ் பே” செயலி மூலம் கடன் வாங்கித்தருவதாக முகநூல், வாட்ஸ் ஆப் போன்றவற்றின் மூலம் விளம்பரம் செய்து வந்துள்ளார். மேலும், இதற்காக சேவை கட்டணம் என்ற பெயரில் கட்டணமும் வசூலித்துள் ளார். ஆனால், குறிப்பிட்டபடி கடன் தொகையை வாங்கித்தர வில்லை எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழகம் முழு வதும் பல லட்ச ரூபாய் மோசடி செய்திருக்கலாம் எனவும், கடந்த 2 ஆண்டுகளாக இந்த மோசடியை செய்து வருவதாக வும் கூறப்படும் நிலையில், இவர் மீது கோவையைச் சேர்ந்த 3 பேர் கோவை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித் தனர். இதனடிப்படையில் குற்றப்பிரிவு காவல் துறையினர் சதீஷை கைது செய்தனர். இவர் மேலும் பல மாவட்டங்களில், பல்வேறு நபர்களை ஏமாற்றியதும், அவர்களிடமிருந்து பணம் பெற்றதும் தெரியவந்துள்ளதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தார்ச்சாலை அமைத்துத்தர வலியுறுத்தல்
தார்ச்சாலை அமைத்துத்தர வலியுறுத்தல் தருமபுரி, பிப்.22- நல்லம்பள்ளி அருகே உள்ள பெருமாள் கோவில் மேட்டிலி ருந்து, பட்டாளம்மன் கோவில் வரை உள்ள மண்சாலையை தார்ச்சாலையாக மாற்றித்தர வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட தடங்கம் ஊராட்சி, தருமபுரி நகரத்தை ஒட்டியுள்ளது. தடங்கம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பெருமாள் கோவில்மேடு, பட்டாளம்மன் கோவில் வழியாக தருமபுரி நகருக்கு செல் லும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மண்சாலை உள்ளது. நகர விரிவாக்கத்தின் காரணமாக இங்கு குடியிருப்புகள் விரைவி யுள்ளன. சுமார் 6 மாதத்திற்கு முன்பு இந்த மண்சாலையில் ஜல்லி கொட்டப்பட்டு சாலைமுழுவதும் பரப்பி விடப்பட்டது. ஆனால், தார்ச்சாலையாக அமைக்கப்படவில்லை. இந்த, ஜல்லி நிறைந்த சாலையில் மக்கள் நடந்து செல்லவே சிரமப் படுகின்றனர். எனவே, இச்சாலையை தார்ச்சாலையாக மாற் றித்தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விதிமீறிய கட்டடங்கள்: உதகை நகராட்சியில் விவாதம்
உதகை, பிப்.22- விதிமீறிய கட்டடங்கள் குறித்து கவுன்சிலர் கள் காரசார விவாதங்களில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி கூட் டம் வியாழனன்று நடைபெற்றது. இதில் தலைவர் வாணீஸ்வரி தலைமை வகித்தார். மேலும் ஆணையாளர் ஏகராஜ், நகர நல அலுவலர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித் தனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர் கள் பேசுகையில், நகராட்சியில் ஆட்கள் பற் றாக்குறையால் பணிகள் ஏதுவும் நடப்ப தில்லை. மேலும் முஸ்தபா மார்க்கெட் இடிப்பு விவகாரம் வியாபாரிகளிடையே அதிர்ச் சியை ஏற்படுத்தி வருவதால், அது குறித்து தெளிவுப்படுத்த வேண்டும் என்றனர். இதற்கு பதிலளித்து ஆணையாளர் கூறுகையில், நக ராட்சி மார்க்கெட்டில் 126 மீட்டர் வரையில் உள்ள கடைகள் இடிக்கப்படும். இதுகுறித்து வியாபாரிகளிடம் பேசி விளக்கம் கொடுக் கப்பட்டு விட்டது, என்றார். துணைத்தலைவர் ரவிகுமார் பேசுகை யில், 35 ஆவது வார்டில் நடந்த விபத்தில் 6 பெண்கள் உயிரிழந்தது பெரும் இழப்பு. கட்டடங்களுக்கான அனுமதி நகராட்சி வழங் குவதில்லை. ஆன்லைன் மூலம் மாவட்ட ஆட்சியர் தான் அனுமதி வழங்குகிறார். அந்த கட்டிடத்தில் விதிமீறில் இருந்ததால் சீல் வைக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள சாலை பாதுகாப்பற்றது. அந்த சாலையை ஆய்வு செய்து அபாயகரமான பகுதிகளில் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும், என்றார். இதைத்தொ டர்ந்து பல்வேறு கவுன்சிலர்கள், குடிநீர் பிரச் சனை, தெரு நாய்கள் பிரச்சனை உள்ளிட்ட வைகள் குறித்து பேசினர். பின்னர், விவாதங்க ளுக்கு பின்னர் மன்றத்தில் ஒப்பதலுக்காக வைக்கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
ரேசன் கடையை சேதப்படுத்திய யானைகள்
கோவை, பிப்.22- வால்பாறை நல்லகாத்து எஸ்டேட் பகுதிக் குள் நுழைந்த ஐந்து யானைகள் ரேசன் கடையை உடைத்து சேதப்படுத்தியது. இத னையடுத்து, வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் யானைகளை வனப்பகுதிக் குள் விரட்டியடித்தனர். கோவை மேற்கு தொடர்ச்சி மலையொட் டிய பகுதிகளில் உள்ள வன விலங்குகள் சமீப காலமாக ஊருக்குள் நுழைந்து விடுவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக, வால் பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதி களில் காட்டு யானைகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. மேலும் அவை அங்குள்ள ஆற்றங்கரையோரங் களில் கூட்டமாக சுற்றி திரிந்து வருகிறது. இந் நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளி யேறிய 5 காட்டு யானைகள் புதனன்று நள் ளிரவு நல்லகாத்து எஸ்டேட் பகுதிக்கு வந் தது. பின்பு அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக் குள் புகுந்து அங்குள்ள ரேசன் கடையை தாக்கி ஜன்னல், கதவு மற்றும் சுற்றுச்சுவரை உடைத்து சேதப்படுத்தியது. பின்பு கடைக் குள் இருந்த அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களை கூட்டமாக தின்றது. நள்ளிரவு நேரத்தில் யானைகள் பிளிறும் சத்தம் கேட்டு பொதுமக்கள் தெருவுக்கு வந்து பார்த்த பொழுது அங்கு காட்டு யானைகள் ரேசன் க டையை சூறையாடியது தெரியவந்தது. பின்பு தகவலின்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, 5 காட்டு யானைகளையும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.
சிவில் சப்ளை குடோன் கட்ட ஆய்வு
சிவில் சப்ளை குடோன் கட்ட ஆய்வு உதகை,பிப். 22- நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தை கடந்த 1998 ஆம் ஆண்டு அரசு தாலுகாவாக அறிவித்தது. இந்த தாலுகா அலுவ லகம் அரசு மருத்துவமனை கட்டிடத்தில் இயங்கி வந்தது. அதன்பின் அரசு தாலுகா அலுவலகத்திற்கு கட்டிடம் கட்டப் பட்டு தாலுகா அலுவலகம் அரசு கட்டிடத்தில் செயல்பட்டு வரு கிறது. மேலும் சிவில் சப்ளை குடோன் கடந்த பல ஆண்டுக ளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. போதிய வசதி இல்லாமல் இரு வேறு இடங்களில் சிவில் சப்ளை குடோன் இருப்பதால், பெரும் பயனாளர்களுக்கு பெரும் அலைச்ச லாக இருந்து வருகிறது. இந்நிலையில், பந்தலூர் இரும்பு பாலம் செல்லும் வழியில் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தை சிவில் சப்ளை குடோன் கட்டுவதற்கு ஏற்ற இடமா என்பது குறித்து அதி காரிகள் ஆய்வு செய்தனர்.
வனப்பகுதியில் நிலவும் வறட்சி: தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் பலி
வனப்பகுதியில் நிலவும் வறட்சி: தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் பலி சேலம், பிப்.22- தலைவாசல் அருகே விவசாய தோட்டத்தில் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த 3 புள்ளிமான்களில், ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானவேல் (48). இவரது விவசாய தோட்டத்தில் உள்ள 80 அடி ஆழமுள்ள கிணற்றில், வனப் பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த மூன்று புள்ளி மான் கள் விழுந்துள்ளது. இதையறிந்த தலைவாசல் வனத்துறை யினருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தகவ லறிந்து ஆத்தூர் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் அசோ கன் தலைமையிலான மீட்பு படையினர் உதவியுடன் கிணற் றில் விழுந்த மூன்று புள்ளி மான்களை மீட்டனர். ஆனால், அதில் ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. தற்போது கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், வனப்பகுதியில் போதிய தண்ணீர் இல்லாமல் வனவிலங்குகள் குடியிருப் புப் பகுதிக்கும், விவசாய தோட்டத்திற்கும் செல்வதால் இது போன்ற சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின் றன. எனவே, வனப்பகுதியிலேயே வனவிலங்குகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சூழலியலார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையோர வியாபாரம் செய்வது தொடர்பான பேச்சு வார்த்தை
சாலையோர வியாபாரம் செய்வது தொடர்பான பேச்சு வார்த்தை திருப்பூர், பிப்.22- டிகேடி பேருந்து நிறுத்தம் அருகிலிருந்து அனைத்து வகை பழங்களையும் வியாபாரம் செய்து கொள்ளலாம் என வியா ழனன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சார் ஆட்சியர் தெரி வித்துள்ளார். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பல்லடம் சாலை தெற்கு உழவர் சந்தைக்கு அருகில் சாலையோர வியா பாரம் செய்வது குறித்து வியாழனன்று சார் ஆட்சியர் தலை மையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், டிகேடி பேருந்து நிறுத்தம் அருகிலிருந்து வாழைப்பழம் உட்பட அனைத்து வகை பழங்களையும் சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்து கொள்ளலாம் என சார் ஆட்சியர் தெரிவித் துள்ளார். இப்பேச்சுவார்த்தையில், காவல் துணை ஆணை யர் நாகராஜ், ஆய்வாளர் கணேஷ், உழவர் சந்தை அதிகாரி கள், நெடுஞ்சாலைத் துறையினர், சாலையோர வியாபாரி கள், விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
தேசிய தடகளப் போட்டியில் வெண்கலம் வென்ற காவலர்
தேசிய தடகளப் போட்டியில் வெண்கலம் வென்ற காவலர் திருப்பூர், பிப். 22 – தேசிய தடகளப் போட்டியில் திருப்பூர் மாநகர அனுப்பர்பா ளையம் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் ஆர்.காளியப்பன் வெண்கலப் பதக்கம் வென்றார். மகாராஷ்டிரா மாநிலம் பூனே நகரில் உள்ள சத்ரபதி சிவாஜி மைதானத்தில் பிப்ரவரி 13 முதல் 17 ஆம் தேதி வரை தேசிய அளவிலான 44ஆவது நேஷனல் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2024 போட்டி நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகரம் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமைக் காவலர் ஆர்.காளியப் பன் (55) 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கமும், தேசிய அளவிலான நீளம் தாண்டும் போட்டியில் நான்காம் இடமும் பெற்றார். இதையடுத்து ஜூன் மாதம் ஸ்வீடன் நாட்டில் நடைபெறவி ருக்கும் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறார். இவரை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு வியாழனன்று நேரில் அழைத்து வெகு மதி அளித்துப் பாராட்டினார்.
திருப்பூர் மாவட்டத்தில் 49 தானியங்கி மழைமானிகள்
திருப்பூர் மாவட்டத்தில் 49 தானியங்கி மழைமானிகள் திருப்பூர், பிப். 22 - திருப்பூர் மாவட்டத்தில் 8 வட்டங்களில் 49 தானியங்கி மழைமானிகள் அமைக்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் தெரிவித்தார். கடந்த வருவாய் நிர்வாக ஆணையரகத்தின் காணொலிக் காட்சி ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்ல டம், ஊத்துக்குளி, தாராபுரம், காங்கயம், உடுமலைப் பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 வட்டங்களில் மொத்தம் 49 தானியங்கி மழைமானிகளை வரும் ஏப்ரல் 30.ஆம் தேதிக் குள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் அந்த மழைமானிகளை கம்பிவேலி அமைத்து பாதுகாக்கவும் உத்தரவிட்டப்பட்டுள் ளது. இந்த 49 மழைமானிகள் அமைப்பதற்கான முதற்கட்ட பணி கள் கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருவதாகவும் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.
மாநில அளவிலான பயிலரங்கத்திற்கு அரசு கல்லூரி மாணவி தேர்வு
திருப்பூர், பிப்.22- தமிழ்நாடு நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்று நாட்கள் பிப்.21 முதல் 23 வரை மாநில அளவிலான பேரிடர் மற்றும் முதலுதவி விழிப்பு ணர்வு பயிலரங்கம் நடைபெறுகிறது. இந்த முகாமிற்கு சிக் கண்ணா அரசு கலை கல்லூர் மாணவி தேர்வு செய்யப்பட்டுள் ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகத்தில் இருந்தும் 150 நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்கி றார்கள். இதில், பாரதியார் பல்கலைக்கழகத்திலிருந்து மொத் தம் ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். அதில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 2 மாணவி லோகநாயகி ( இரண்டாம் ஆண்டு கணினி பயன்பாட்டில் துறை ) தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே அரசு கல்லூரி மாணவி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முகாமில், பாம்பு கடித்தவர்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்யவேண்டும், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு முதலு தவி செய்து காப்பாற்ற வேண்டும், மலையேறும் போது மூச்சு திணறல் ஏற்படுபவர்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்து காப் பாற்ற வேண்டும், பேரிடர் காலங்களில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், தீயணைப்பு வாகனங்களுடன் காட்டுத்தீ ஏற்படும் போது எவ் வாறு தீயை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும், கீழடி அக ழாய்வு அருங்காட்சியகத்தை பார்வையிடுதல் போன்ற பயிற் சிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள். இம் முகாமில் பங்கேற் கும் மாணவியை சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், மாணவ, மாணவிகள் பாராட்டி வழியனுப்பி வைத்தனர்.
\பல்லடம் ஆணையர் பணியிட மாற்றம்
பல்லடம் ஆணையர் பணியிட மாற்றம் திருப்பூர், பிப்.22- மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, பல்ல டம் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த முத்துசாமி நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பல்லடம் நகராட்சி பொறுப்பு ஆணையராக காங்கயம் நகராட்சி ஆணையர் கனி ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பல்லடம் நகராட்சி வரு வாய் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த நந்தினி சேலம் மாவட் டம், ஆத்தூர் நகராட்சிக்கும், அங்கு பணியாற்றி வந்த மாரி யப்பன் பல்லடத்துக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
தபால் நிலையம் தொடங்க கோரிக்கை
தபால் நிலையம் தொடங்க கோரிக்கை திருப்பூர், பிப்.22- தமிழ்நாடு முதன்மை அஞ்சல் துறை தலைவருக்கு அண் ணாதுரை என்பவர் புதன்கிழமை அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம், பல்லடம் மேற்கு பகுதியில் கடந்து 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தபால் நிலையம் கடந்த 5 ஆண்டுகளாக செயல்படாமல் உள் ளது. இதனால், பல்லடம் மேற்குப் பகுதியில் உள்ள மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, கோவை - திருச்சி சாலையில் செயல்பட்டு வந்த தபால் நிலையத்தை மீண்டும் அதே பகுதியில் தொடங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
சிறுவாணி அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் எடுக்க அனுமதி
சிறுவாணி அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் எடுக்க அனுமதி கோவை, பிப்.22- கோவை சிறுவாணி அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் எடுக்க கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு அருகே அடர்ந்த வனப் பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து கோவைக்கு குடிநீர் எடுக்கப் பட்டு வருகிறது. அணை இருக்கும் பகுதி கேரளா என்பதால் அணை பராமரிப்பு உட்பட அனைத்தும் கேரளா வசமே இருக் கிறது. இதற்காக ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை கேரளா வுக்கு செலுத்த வேண்டும். 50 அடி உயரம் கொண்ட இந்த அணையின் ஒரு பகுதியில், நீரேற்று நிலையம் அமைக்கப் பட்டு அங்கிருந்து சிறுவாணி மலை அடிவாரத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்டு பின்னர் மாந கர பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் எடுக்க முடியும். கடந்த சில மாதமாக, அணையின் நீர் மட்டம் குறைந்ததால் தினமும் 70 எம்.எல்.டி ( 7 கோடி) லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென அதிகாரி கள் 7 கோடி லிட்டர் தண்ணீரை எடுக்க அனுமதிக்காமல், மூன்று கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே எடுக்க அனுமதித்த னர். இதனால், அதிர்ச்சி அடைந்த தமிழக அதிகாரிகள், கூடுத லாக தண்ணீர் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கேரளா அரசிடம் கோரிக்கை வைத்தனர். மேலும் இது தொடர்பாக இரு மாநில அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் எடுக்க கேரள அரசு அனுமதித்து உள்ளது. இதை அடுத்து அணை யில் இருந்து கூடுதலாக குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. படிப் படியாக அதன் அளவு இன்னும் அதிகரிக்கப்படும் என்று அதி காரிகள் தெரிவித்தனர்.
பெங்களூரு – நாகர்கோவில் விரைவு ரயில் இன்று முதல் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கம்
சேலம், பிப்.22- பெங்களூரு – நாகர்கோவில் ரயில் வெள்ளியன்று (இன்று) முதல் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி -மேலப்பாளையம் ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் பணி நடக்கிறது. இதனால் நாகர் கோவில் - கோவை முன்பதிவற்ற ரயில் இயக்கம் வெள்ளி யன்று (இன்று) முதல் பிப்.28 ஆம் தேதி வரை நாகர்கோ வில் - திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கத்தில் கோவையில் இருந்து இயக்கப்படும் ரயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல், பெங் களூரு - நாகர்கோவில் விரைவு ரயில் வெள்ளியன்று (இன்று) முதல் பிப்.27 ஆம் தேதி வரை திண்டுக்கல் - நாகர்கோவில் வரை ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் வெள்ளி யன்று (இன்று) முதல் பிப்.27 ஆம் தேதி வரை திண்டுக்கல் லில் இருந்து புறப்பட்டு பெங்களூருக்கு சென்றடையும். ஈரோடு - செங்கோட்டை முன்பதிவற்ற விரைவு ரயில் வெள்ளி யன்று (இன்று) முதல் பிப்.27 ஆம் தேதி வரை வாஞ்சி மணியாச்சி - செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படு கிறது. மறுமார்க்கத்தில் இயக்கப்படும் ரயில் வாஞ்சி மணி யாச்சியிலிருந்து புறப்பட்டு ஈரோட்டை அடையும். வெள்ளியன்று (இன்று) தாதரில் புறப்பட்டு நெல் லையை அடையும் தாதர் விரைவு ரயிலின் இயக்கம் மதுரை - நெல்லை இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத் தில் பிப்.28 ஆம் தேதி நெல்லையில் புறப்பட வேண்டிய தாதர் விரைவு ரயில் மதுரையிலிருந்து புறப்படும். இதேபோன்று வெள்ளியன்று (இன்று) இயக்கப்படும் ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கத்ரா -நெல்லை வாராந்திர விரைவு ரயில் திருச்சி - நெல்லை இடையே ரத்து செய்யப்ப டுகிறது. தாதரிலிருந்து நெல்லைக்கு சனியன்று (நாளை) செல்லும் தாதர் விரைவு ரயில் விருதுநகர் - நெல்லை இடையே ரத்து செய்யப்படும். மறு மார்க்கத்தில் பிப்.26 ஆம் தேதி நெல்லையில் புறப்பட வேண்டிய தாதர் விரைவு ரயில் விருதுநகரிலிருந்து புறப்படும். மேலும், பிப்.25 ஆம் தேதி நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட வேண்டிய சிறப்பு ரயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.