திருப்பூர், ஜூலை 10- திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் 27ஆவது ஆண்டாக பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கான ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. திருப்பூர், 15 வேலம்பாளையம், சிறுபூலு பட்டி ரிங் ரோட்டில் அமர்ஜோதி கார்டன் பகுதியில் இயங்கிவரும் திருப்பூர் விளை யாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை (டீ-செட்) மைதானத்தில், 27 ஆவது ஆண்டாக பிளஸ் 2 வகுப்பில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்த மாண வர்களுக்கான ஊக்கத் தொகை வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவுக்கு டீ-செட் அமைப்பின் தலைவர் நிக்கான்ஸ் வேலுச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் துரைசாமி வர வேற்றார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் ராஜன், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் திருவளர்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இதனை தொடர்ந்து பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாண விகளுக்கு சான்றிதழ் மற்றும் பண பரிசு களை வழங்கினார். இதில் 600-க்கு 597 மதிப்பெண்கள் எடுத்த கொங்கு வேளாளர் பள்ளி மாணவி சுதர்ஷிகா, 596 மதிப்பெண் கள் எடுத்த லிட்டில் பிளவர் பள்ளி மாணவி தியா ராஜ் மற்றும் ஏவிபி பள்ளி மாணவர் ஹரிஷ், அதேபோல் 595 மதிப்பெண்கள் எடுத்த விவேகானந்தா பள்ளி மாணவி அபி நயா, பிரண்ட்லைன் பள்ளி மாணவி விஜயா உள்பட 33 பேருக்கு ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான பணப்பரிசுகள், கோப் பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் டீ- செட் பொருளாளர் தேவரா ஜன் நன்றி கூறினார். விழாவில் காந்திராஜன், சுதாமா கோபாலகிருஷ்ணன், கோவிந்தரா ஜன் உள்பட டீ- செட் முன்னாள் தலைவர் கள், நிர்வாகிகள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவினை உடற் கல்வி ஆசிரியர் பழனிச்சாமி தொகுத்து வழங் கினார்.