districts

img

ஔவையார் அரசு மகளிர் பள்ளியில் படிப்பு வட்டம் துவக்கம்

தருமபுரி, நவ.8- தகடூர் புத்தகப் பேரவை சார்பில் தருமபுரி அவ்வை யார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஔவை - அதிய மான் படிப்பு வட்டம் துவக்க விழா நடைபெற்றது. தருமபுரியில் படிப்பு வட்ட துவக்க விழா நிகழ்ச்சிக்கு உதவி தலைமை ஆசிரியர் ஜோதி லதா தலைமை வகித்தார்.  ஆசிரியர் ஜலஜா ரமணி வரவேற்றார். இதில்  சுவாமி விவேகானந்தர், முன்னாள் குடியரசுத் தலைவர்  ஏபிஜே அப்துல் கலாம் போன்ற ஆளுமைகள் குறித்தும்,  குழந்தைகளுக்கான கதைகள், காலநிலை மாற்றத்தால்  ஏற்படும் பாதிப்புக்கள் பற்றிஉலகம் முழுவதும்  விழிப்புணர்வு  ஏற்படுத்தி வரும் ஸ்விட்சர்லாந்து மாணவி கிரெட்டா  துன்பெர்க் உள்ளிட்ட புத்தகங்கள் குறித்து மாணவிகளிடம்  அறிமுகப்படுத்திப் பேசினர். இந்நிகழ்ச்சியில் தகடூர் புத்தகப் பேரவையின் செயலா ளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. செந்தில் சிறப்புரையாற்றினார். பேரவையின் தலைவர் இரா. சிசுபாலன், பேரவையின் முன்னணி செயல்பாட்டாளர் நெ.த. அறிவுடை நம்பி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் மாதந்தோறும் புத்தக அறிமுக நிகழ்வு கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. முடிவில், உடற் கல்வி ஆசிரியர் அருள் செல்வி நன்றி கூறினார்.