திருப்பூர், மார்ச் 15 - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருப் பூர் மாவட்ட அலுவலத்தின் புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை முன்னாள் மாநிலத் தலைவர் பேராசிரியர் மோகனா திறந்து வைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட அலுவலகத் திறப்பு விழா, சர்வ தேச பெண்கள் தினம், விஞ்ஞானி ஐஸ்டீன் விழா என முப்பெரும் விழா வெள்ளியன்று திருப்பூர் கல்லூரி சாலை வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே புதுப்பிக்கப்பட்ட கட்டி டத்தில் நடைபெற்றது. அறிவியல் இயக்க திருப்பூர் மாவட்டத் தலைவர் கிருஷ்ண மூர்த்தி தலைமை ஏற்றார். மாவட்டச் செயலர் கெளரிசங்கர் வரவேற்றார். மாவட்ட முன் னாள் தலைவர் ஆ.ஈசுவரன், வடக்கு ஒன்றி யத் தலைவர் யோகநாதன், மாநிலச் செயலர் வி.ராமமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். அறிவியல் இயக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் பேராசிரியர் மோகனா அலுவலகத்தைத் திறந்து வைத்து உரை யாற்றினார். மேலும் மாநிலச் செயலர் தியா கராஜன் சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொதுச் செயலா ளர் முகமது பாட்சா மற்றும் மாநில செயலர் மெகபுன்னிஷா, மாவட்ட நிர்வாகி ஜெயலட் சுமி உள்பட மாணவர்கள், அறிவியல் ஆர்வ லர்கள் கலந்து கொண்டனர்.