ஈரோடு, டிச. 25- ஈரோடு மாவட்டத்தில் பாலர் பூங்கா தொடக்கவிழா ஞாயிறன்று ஈரோட்டில் விபி.சிந்தன் நினைவகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பா.லலிதா தலைமை வகித்தார். வி.ஏ.விஸ்வநாதன் வரவேற் புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஈரோடு நாடக கொட்டகையைச் சேர்ந்த இளங் கலைஞர்கள் காவேரி என்ற தலைப்பில் நாடகம் நடத்தினர். தமுஎகச மாவட்ட துணை தலைவர் சி.சரிதாஜோ குழந்தை களுக்கு குட்டி கதைகளை கூறினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் செ.கார்த்தி கேயன் காட்டு விலங்குகள் குறித்த படம் காட்டினார். தமுஎகச மாவட்ட தலைவர் மு.சங்கரன் அவரது இணையர் இராஜேஸ்வரி ஆகியோர் பாடல்கள் பாடினர். பிரபாகர், பி. ராம்குமார் ஆகியோர் மந்திரமா, தந்திரமா என்று மேஜிக் செய்து காட்டி னார். ஆசிரியர் சு.அருள்மாறன் நோ அட்மிசன் என்ற தலைப்பில் உரை யாற்றினார். ஈரோடு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் நா.மணி வாழ்த்துரை வழங்கினார். பாலர் பூங்காவின் மாநில அமைப்பாளர் என்.அமிர்தம் நிறைவுரையாற்றினார். முன்னதாக விஷால், நிவேதா (ஈரோடு நகரம்), கொடுமுடி ஸ்ரீநிதி, பூவரசன், டி.செண்பகவள்ளி, எஸ்.தர்சன் (பவானி), வசந்த், வினோத் (பெருந்துறை), அருவிகுமார், சுசீந்திரன் (கோபி), கோல்குமார், ரவிக் குமார் (ஈரோடு தாலுகா) ஆகியோர் அமைப்பு குழுவிற்கு தேர்வு செய்யப் பட்டனர். இறுதியாக பி.தமிழ்பாரதி நன்றி கூறினார்.