districts

img

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வணிக தொடர்பாளர்கள் சங்கம் துவக்கம்

சேலம், ஜூலை 1- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வணிக தொடர்பாளர்கள் சங்கம், மாநிலம் தழுவிய அளவில் புதிதாக பெரம்ப லூரில் துவங்கப்பட்டது. முதற்கட்ட மாக 50 பேர் கொண்ட மாநில அள விலான அமைப்பு குழுவும் உரு வாக்கப்பட்டது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தமிழகம் முழுவதும் 3500க்கும் மேற் பட்டோர் வங்கி வணிகத் தொடர் பாளர்களாக பணியாற்றி வருகின்ற னர். இவர்களை அமைப்பு ரீதியாக திரட்ட எடுக்கப்பட்ட முயற்சியின் ஒரு  பகுதியாக மாநிலம் முழுவதிலும் இருந்து 600க்கும் மேற்பட்ட வணிக தொடர்பாளர் பங்கு பெற்ற கூட்டம் பெரம்பலூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகி எஸ். தீனதயாளன் தலைமை யில் நடைபெற்றது. இதில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பிசினஸ் கரஸ்பாண்டன்ட் யூனியன் என்ற பெயரில் புதிய அமைப்பு உரு வாக்கப்பட்டது. தமிழகம் முழுவதிலு மிருந்து பிரதிநிகள் பங்கேற்றனர். குறிப்பாக, ஐஓபி வங்கி வணிக தொடர் பாளர்களை வஞ்சித்து பெரு முதலா ளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங் களின் கீழ் பணியாற்ற ஐஓபி வங்கி  நிர்வாகம் எடுத்துள்ள முடிவை ரத்து செய்ய வேண்டும். ஐஓபி வணிக தொடர்பாளர்கள் ஐஓபி வங்கி பணி யாளர்களாக வங்கியின் கட்டுப்பாட் டில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு பணியாற்றும் போது வணிக தொழிலாளர்களுக்கு கமிஷன் குறை பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற் படும். இதனால் வங்கிக்கும், வணிக தொடர்பாளர்களுக்கும் இருவருக் குமே லாபம் இருக்காது. ஊழியர்க ளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற் படும் எனவும், ஐஓபி வணிக தொடர் பாளர்கள் தொடர்ந்து ஐஓபி நிறு வனத்திற்கு மட்டும் பணியாற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஐஓபி பிசினஸ் கரஸ்பாண்டன்ட் யூனி யனை இந்திய வங்கி ஊழியர் சம் மேளனத்துடன் இணைத்து செயல் படவும் முடிவு செய்யப்பட்டது. இதன் பின் நடைபெற் புதிய நிர் வாகிகள் தேர்வில், சங்கத்தின் புதிய மாநில தலைவராக எஸ். தீனதயா ளன், மாநில செயலாளர் பழனிசாமி, பொருளாளர் லட்சுமி உள்ளிட்டு 50க்கும் மேற்பட்ட அமைப்பு குழு வினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.