ஈரோடு, நவ. 27- ஈரோடு மாநகரில் செய் தியாளர்கள், புகைப்படக் காரர்கள் மற்றும் ஒளிப்பதி வாளர்களுக்கான அறை யினை அமைச்சர் சு.முத்து சாமி திறந்து வைத்தார். ஈரோடு மாநகரில் வரு வாய் கோட்டாட்சியர் அலுவ லக முகப்பு பகுதியில் அமைந் துள்ள செய்தியாளர் அறை யினை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி ஞாயிறன்று திறந்து வைத்தார். மாவட்ட செய்தியாளர்கள், புகைப்படக் காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கான அறையில் செய்தியாளர்கள் அமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, ஈரோடு மாநக ராட்சி மரியாதைக்குரிய துணை மேயர் வே.செல்வராஜ், ஈரோடு வருவாய் கோட் டாட்சியர் சதீஸ்குமார், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் மாதேஸ்வரன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.