சேலம், ஏப்.3- மகுடஞ்சாவடியில் இந்தியா கூட்டணியின் தேர்தல் பணி மனையினை கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ திறந்து வைத்தார். நாமக்கல் மக்களவை தொகுதிக்குட்பட்ட மகுடஞ்சா வடியில் இந்தியா கூட்டணியின் திமுக தேர்தல் பணிமனை திறப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் திமுக ஒன்றியச் செய லாளர் பச்சமுத்து தலைமையில் நடைபெற்றது. கொங்கு நாடு மக்கள் தேசியக்கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் எம்எல்ஏ தேர்தல் பணிமனையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கொமதேக மாநில நிர் வாகிகள் அசோகன், ரமேஷ், திமுக சேலம் மேற்கு மாவட்ட துணைச்செயலாளா் சுந்தரம், தொகுதி பார்வையாளர் முருக வேல், கொமதேக மாவட்டச் செயலாளர் சரவணன், திமுக மாணவரணி கண்ணன், காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜா, அர்ச் சுணன், விஜயகுமார், விசிக ராஜூ, ஜெகதீசன், மக்கள் நீதி மய்யம் சரவணன், ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.