அவிநாசி, செப்.4- அவிநாசியில், புதனன்று நீலகிரி நாடாளு மன்ற உறுப்பினர் ஆ.ராசா வளர்ச்சித்திட்டப் பணிகளை துவக்கி வைத்து, வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். அவிநாசி ஒன்றியம், ராமநாதபுரம் ஊராட்சி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் புதிய கட்டி டம் ரூ.11,63,000 லட்சம் மதிப்பீட்டில் கட் டப்பட்ட கட்டடத்தை ஆ.ராசா எம்.பி. திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, செம்பிய நல்லூர் ஊராட்சி நாதம்பாளையம் கிராமம் பொது விநியோக கடை ரூ.10 லட்சம் மதிப் பீட்டிலும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2024 - 2025 அவிநாசி சிறப்பு நிலை பேரூ ராட்சி வார்டு எண் 17இல் ரூ.413 லட்சம் மதிப் பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதைய டுத்து புதுப்பாளையம் ஊராட்சி கணியாம் பூண்டி முதல் வேலம்பாளையம் பஞ்சாயத்து எல்லை வரை 1.170 கி.மீ சாலை அமைத்தல், அதேபோல மற்றொரு சாலை ரூ.47.72 லட் சம், மதிப்பீட்டிலும், மேலும் புதுப்பாளையம் ஊராட்சி வலையபாளையம் பிரிவு முதல் பெரியார் காலனி வழியாக புதுப்பாளையம் சாலை வரை ரூ.51.90 லட்சம் மதிப்பீட்டில் 1.500 கி.மீ சாலை அமைத்தல் மதிப்பீடு புதுப்பாளையம் ஊராட்சி அண்ணா மறும லர்ச்சி திட்டம் 2021-2022 கீழ், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பொது விநியோக்கடை அடிக் கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்வில் திருப்பூர் தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, திமுக ஒன்றியச் செயலாளர் பழனிசாமி, சிவப் பிரகாஷ், பேரூராட்சித் தலைவர் தனலட்சுமி பொன்னுச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் கவுன்சிலர் முத்துசாமி, திருமுருகன்பூண்டி நகர மன்றத் தலை வர் குமார், நகர்மன்ற உறுப்பினர் பாரதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், விஜயகுமார், உட்பட பலர் கலந்து கொண்ட னர்.