திருப்பூர், ஜூன் 20 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொங்கலூர் ஒன்றிய அலுவலக புதிய கட்டட மான தோழர் பி.ராமமூர்த்தி நினைவகத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் திறந்து வைத்தனர். திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில் திங்க ளன்று மாலை மார்க்சிஸ்ட் கட்சியின் பொங்க லூர் ஒன்றிய புதிய அலுவலக கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.சம்பத் தலைமை வகித்தார். இதில் அலுவலகக் கட்ட டமான தோழர் பி.ராமமூர்த்தி நினைவகத்தை மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் ஆகியோர் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினர். தோழர் கே.ராமசாமி நினைவு அலுவல கத்தை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், தோழர் எஸ்.கந்தவேல் நினைவு வளாகத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். திறப்பு விழா கூட்ட நிகழ்வில் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பவித்ராதேவி வரவேற் றார். இதைத்தொடர்ந்து ஒன்றியக்குழு உறுப் பினர் எஸ்.சிவசாமி, ஒன்றியச் செயலாளர் ஆர்.பாலன், மதிமுக பொங்கலூர் பாலசுப் பிரமணியம், அப்பநாயக்கன்பட்டி ராஜேந்தி ரன், மதிமுக மாவட்ட செயலாளர் மணி, ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். முன்ன தாக அலுவலகக் கட்டடம் கட்ட பல்வேறு வகைகளில் உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப் பினர் கே.உண்ணிகிருஷ்ணன், கள்ளிப்பா ளையம் ஊராட்சிமன்றத் தலைவர் சாந்தினி சம்பத், ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந் தலைவர் அபிராமி அசோகன் உள்பட பல் வேறு அரசியல் இயக்கத்தினர், மார்க்சிஸ்ட் கட்சியினர், வர்க்க வெகுஜன அமைப்புக ளைச் சேர்ந்தோர், ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில், மார்க்சிஸ்ட் கட்சி அலுவ லகம் கட்சியினருக்கு மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் என தெரி விக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.