கோபி, டிச.19- கோபி அருகே பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, காட்சிப்பொரு ளாக இருந்த அங்கன்வாடி மைய கட்டடம் திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபா ளையம் அருகே உள்ள அக்கரைகொடிவேரி ஊராட்சி, சிங்கிரிபாளையம் கிராமத்தில், சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம் பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.11.90 லட்சம் மதிப் பீட்டில் அங்கன்வாடி மைய கட்டடம் கட் டப்பட்டது. அதற்கான பணிகள் நிறை வடைந்து பல மாதங்களாகியும் திறக்கப்ப டாமால் காட்சிப் பொருளாக காணப்பட்டு வந்தது. இதுகுறித்து தீக்கதிர் தமிழ் நாளிதழில் செய்தி வெளியானது. இச் செய்தி அதிகாரிகளின் கவனத்திற்கு சென்ற நிலையில், செவ்வாயன்று சிங்கிரிபா ளையத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர், சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டு அங்கன்வாடி மைய கட் டடத்தை திறந்து வைத்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.