கோபி, ஜூலை 20- ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் அரசு நடுநலைப்பள்ளியில் ரூ.64 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கூடு தல் வகுப்பறை கட்டிடத்தை முதல்வர் கணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர், தொடக்கப்பள்ளி அலுவலர் திருநாவுகரசு, பள்ளி தலைமை ஆசிரியை ரமாராணி ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கேற்றினார்கள். இதனைதொடர்ந்து கூடு தல் வகுப்பறை கட்டிடத்திற்கு நமக்குநாமே திட்டத் தில் தன்னார்வலர்கள், ஆசிரியை ஆசிரியர்கள் பங்க ளிப்பில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் 5 சிறப்பு ஊடா டும் பலகைகளை பள்ளி மாணவ மாணவர்கள் முன்னிலையில் வழங்கினர் இந்நிகழ்ச்சியில் கூகலூர் பேரூராட்சி மன்றத் தலை வர் ஜெயலட்சுமி, பேரூர் கழக செயலார் ராஜாராம், மற்றும் மாணவ மாணவிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.