திருப்பூர், ஜூன் 19 - திருப்பூர் மாநகராட்சி 55 ஆவது வார்டுக்கு உட்பட்ட கோபால் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை அலுவலகமான தோழர் ஏ.கே. கோபாலன் நினைவகம் திறப்பு விழா அப்பகுதி மக்கள் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது. கோபால் நகரில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சிக்கு அப்பகுதியைச் சேர்ந்த காலஞ்சென்ற முத்துசாமி முத்த்தம்மாள் தம்பதியினர் பல லட் சம் ரூபாய் மதிப்புள்ள 2 3/4 சென்ட் இடம் தானமாக வழங்கினர். இந்த இடத்தில் ஏ கே கோபாலன் நினைவ கம் கட்டப்பட்டு ஞாயிறன்று திறப்பு விழா நடைபெற்றது. இதில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சு. வெங்கடே சன் எம்.பி., பங்கேற்று புதிய அலுவ லக கட்டிடத்தை திறந்து வைத்தார். முன்னதாக கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். ராஜகோ பால் செங்கொடியை ஏற்றி வைத் தார். கட்சியின் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. உன்னிகி ருஷ்ணன், மாநகரச் செயலாளர் டி. ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பி னர் எஸ்.சுந்தரம், வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர். கணேசன், தெற்கு மாநகரக் குழு உறுப்பினர்கள் பி.பாலன், கே. பொம்முதுரை, த. ஆறுக்குட்டி, எஸ்.பானுமதி உள்ளிட் டோர் தலைவர்களின் படங்களை திறந்து வைத்தனர். கோபாலன் நக ரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்ப குதி பெண்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பொதுமக் கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கிளை கட்டிடம் கட்டுவதற்கு பல் வேறு வகைகளில் பொருளுதவியும், நிதி உதவியும் வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவித்து, பயனாடை அணி வித்து நினைவு பரிசு வழங்கப்பட் டது. இதைத் தொடர்ந்து வெள்ளியங் காடு நால்ரோடு பகுதியில் மார்க் சிஸ்ட் கட்சியின் கட்டிட திறப்பு விழா அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் வேலா.இளங்கோ, கிருஷ்ணன் குழு வினரின் பாடல் மற்றும் கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன. கோபால் நகர் கட்சிக் கிளைச் செயலாளர் பி.ராமு தலைமையில் நடைபெற்ற கூட்டத் தில் சு வெங்கடேசன் சிறப்புரையாற் றினார். செ.முத்துக்கண்ணன், டி.ஜெய பால், எஸ்.சுந்தரம், எஸ்.பானுமதி உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றி னர். முன்னதாக கிளை உறுப்பினர் எம்.கோவிந்தராஜ் வரவேற்றார். கிளை மூத்த உறுப்பினர் ஆறுமுகம் நன்றி கூறினார். திருப்பூரின் பல் வேறு பகுதிகளில் இருந்தும் பெருந் திரளானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.