‘முதலமைச்சர் கோப்பை’ சேலம் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா, சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தலைமை யில் செவ்வாயன்று நடைபெற்றது. இவ்விழாவில், மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ரா.ராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் ரா.அருள், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.