அவிநாசி, மார்ச்.2- தண்ணீர் வந்தவுடன் அத்திக்கடவு அவினாசி திட்டத் திறப்பு விழா நடத்தப் படும் எனத் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி உத்தரவாதம் அளித்துள்ளார். அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணி கள் முழுமையாக முடிவடைந்த நிலை யில் விரைவில் திறப்பு விழா நடத்த கோரியும், விடுபட்ட குளம் குட்டைக ளின் பணிகளை விரைவு படுத்த கோரி யும், மார்ச் 1ல் அவினாசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடத்த அத்திக்கடவு திட்டபோ ராட்ட குழுவினர் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந் தார். இதைத்தொடர்ந்து, அவினாசி அத் திக்கடவு திட்டப்போராட்ட குழுவுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் பொதுப்பணித்துறை, நீர்வளத் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உள் ளிட்டோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், அத்திக்கடவு அவினாசி திட்டத் திறப்பு விழா தண்ணீர் வந்தவுடன் கூடிய விரைவில் திறக்கப் படும். விடுபட்ட குளம் குட்டைகள் தொடர்பாக முதல்வரிடத்திலும் பேசுவ தாக அமைச்சர் உத்தரவாதம் அளித் துள்ளார். அமைச்சரின் உத்தரவா தத்தை ஏற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டத்தை கைவிட்டுவிட்டு அவிநாசி மங்க லம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விளக்க உரை கூட்டம் நடைபெற்றது. இதில், பவானி காளிங்கராயன் அணையிலிருந்து அதிகபட்சமான நீர் வரும்பொழுது, அத்திக்கடவு திட்டத் தின் திறப்பு விழா நடத்த வேண்டும். அதேபோல, அணையிலிருந்து வெளி யேறும் உபரி நீரை விவசாயிகள் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும், பாண்டியாரு, பொன்னம்பல திட்டத்தையும் செயல்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டது. இதில், அத்திக்கடவு திட்டப்போ ராட்ட குழு தொரவலூர் சம்பத், சுப்பி ரமணியம் உள்ளிட்ட பல்வேறு நிர்வா கிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.