districts

img

ரூ.13.45 கோடியில் 92 வகுப்பறைகள் காணொளி வாயிலாக முதல்வர் திறப்பு

தருமபுரி, டிச.26- தருமபுரி மாவட்டத்தில் ரூ.13.45 கோடி மதிப்பீட்டில் கட்டப் பட்ட 92 பள்ளி வகுப்பறைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், தரும புரி மாவட்டத்தில் ரூ.13.45 கோடி மதிப்பீட்டில் 92 புதிய வகுப் பறை கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி மன் றக்கட்டடங்கள், உணவு தானிய கிடங்குகள், நியாய விலை  கடைகள், மகளிர் சுய உதவிக்குழு கட்டடங்கள் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டன. இதனை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றி யம், மாதேமங்கலம் ஊராட்சியில் ரூ.14.31 லட்சம் மதிப்பீட் டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட் டடத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி குத்துவிளக்கேற்றி வைத்தார். தொடர்ந்து, ஏமகுட்டியூர் நியாய விலைக்கடை யினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பொது மக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறிந்து கேட்டறிந்தார். இதேபோல் நல்லபள்ளி மத்திய ஒன்றியம், மானியத அள்ளி ஊராட்சி, அஜ்ஜிப்பட்டியில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைகளை முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அப்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி குத்துவிளக்கு ஏற்றிவைத்து, இனிப்பு வழங்கினார்.