உடுமலை, மார்ச் 18- ஆளும் கட்சியின் வசம் இருக்கும் உடு மலை நகரமன்றத்தில் அமைச்சர் தலை மையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஆளும் கட்சி நகரமன்ற உறுப்பி னர்கள் தங்கள் வார்டுகளில் வேலை நடை பெறுவதில்லை என்ற கூறியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடுமலை நகராட்சி பகுதிகளில் அரசு திட் டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் 18 ஆம் தேதி சனியன்று நகராட்சி கூட்ட அரங்கில் செய் தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலை மையில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் வீனித் மற்றும் அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணை யாளர் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் நக ராட்சி பகுதிகளில் நடைபெறும் அரசு திட்டப் பணிகள் அனைத்து வார்டுகளுக்கும் முறையாக வழங்கப்படுவதில்லை. சில வார்டுகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவ தாகவும், நகர மன்ற ஒப்பந்த குழு தலைவ ருக்கு தெரியாமல் ஒப்பந்தங்கள் விடப்ப டுகிறது என்று புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் உறுப்பினர்கள் பேசுகையில், உடு மலை ஐஸ்வர்யா நகரில் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் மருத்துவ சங்கத்தி னர் வியாபார நோக்கத்தில் கட்டியுள்ளனர். அதை அகற்றிவிட்டு நகராட்சி நிர்வாகம் பூங்கா அமைக்க வேண்டும். நகராட்சிக்கு சொந்தமான வார சந்தையில் இருக்கும் கடைகளை உள் வாடகைக்கு விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி பகுதிகளில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், ஆழ்குழாய் மற்றும் கிணறுகளி லிருந்து லாரிகளில் மூலம் தண்ணீர் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும். போக்கு வரத்து நெரிசலை தவிர்க தளி மேம்பா லத்தை விரிவு படுத்த வேண்டும். நகராட்சி யில் பணி புரியும் நிரந்தர தொழிலாளர்க ளுக்கு நிலுவையில் உள்ள வருங்கால வைப்பு நிதி தொகையை செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை முன் வைத்தனர்.