நாமக்கல், ஏப்.3- விதிமீறல்கள் என்ற பெயரில் நடவ டிக்கை மேற்கொள்ளும் கூட்டுறவு துறை நிர்வாகத்தை கண்டித்து நாமக்கல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூட்டு கூட்டு றவு சங்க பணியாளர்கள் திங்களன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங் கும்போது சட்டமன்ற, நாடாளுமன்ற தேர் தல் நேரத்தில் அதிக அளவு கடன் கொடுக் கும் வகையில் பல விதிமுறைகள் வாய் மொழியாக தரத்தப்பட்டு, குறியீட்டை முடிக்க நிர்பந்தம் செய்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட தும், விதிமீறல்கள் எனக்கூறி பணியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதுதொடர்பாக சங்க செயலாளர்கள் பணி யாளர் மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவ டிக்கையும் முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும். ஊழியர்களுக்கு புதிய ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்க ளுக்கு கேரள மாநிலத்தில் வழங்குவது போல ஓய்வூதிய வழங்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட் டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின், மாநில கௌரவ பொதுச்செயலாளர் குப்பு சாமி தலைமை ஏற்றார். மாவட்ட செயலா ளர் கருப்பண்ணன், மண்டல தலைவர் மாத வன், மாவட்ட தலைவர் சிவசங்கரன் ஆகி யோர் உரையாற்றினர். முன்னதாக, நாமக் கல் நல்லிப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளா கத்தில் இருந்து, பணியாளர்களின் கண்டன பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக கோரிக்கை முழக்கமிட்டு வந்த னர். இதில், மாவட்டம் முழுவதும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.